தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: இந்து சமயக் குழுக்கள் இடையூறு; காங்கிரஸ் கண்டனம்

1 mins read
d03e0ee2-a5e6-41df-90c6-0c22a8e62f4d
-

வார­ணாசி: பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் வார­ணாசி தொகுதி உட்­பட வட மாநி­லங்­க­ளின் பல்­வேறு பகு­தி­களில் தீவிர இந்து இயக்­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டங்­களுக்கு இடை­யூறு செய்­த­தாக இந்­திய ஊட­கங்­களை மேற்­கோள் காட்டி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அந்த குழுக்­க­ளைச் சேர்ந்த­வர்­கள் ஹரி­யானா மாநி­லம் அம்­பாலா பகு­தி­யில் ஆளு­யர இயேசு கிறிஸ்து­வின் சிலையை சேதப்­படுத்­தி­னார்கள் என்று 'தி ஹிந்து' நாளேடு தெரி­வித்­துள்­ளது.

இதே­போல், வார­ணா­சி­யில் உள்ள ஒரு தேவா­ல­யத்­துக்கு வெளியே திரண்ட அக்­கு­ழு­வி­னர் 'சான்­டா­கி­ளாஸ்' உரு­வப் பொம்­மை­களை எரித்­த­து­டன், மத­மாற்­றம் தொடர்­பா­க­வும் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

இது தொடர்­பாக மத்­திய, மாநில அர­சு­கள் இது­வரை கருத்து ஏதும் தெரி­விக்­க­வில்லை.

இதற்­கி­டையே, கிழக்கு அசாம் பகு­தி­யில் உள்ள தேவாலயத்­திற்­குள் புகுந்த, பஜ்­ரங் தள் ஆத­ர­வா­ளர்­கள் என்று தங்­களை கூறிக்­கொண்ட சிலர் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டங்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­னர்.

இதை­ய­டுத்து, இத்­த­கைய சம்­ப­வங்­க­ளைத் தடுக்க வேண்­டும் என பாஜக ஆளும் மாநி­லங்­க­ளுக்கு பிர­த­மர் மோடி உத்­த­ர­விட வேண்­டும் என காங்­கி­ரஸ் கூறி­யுள்­ளது.

ஹரி­யானா, ஹைத­ரா­பாத்­தில் நிகழ்ந்­துள்ள சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­களை கைது செய்ய வேண்­டும் என முன்­னாள் மத்­திய அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் வலி­யு­றுத்தி உள்­ளார்.