குண்டுக்கட்டாக அகற்றப்பட்ட பயிற்சி மருத்துவர்கள்

குண்டுக்கட்டாக அகற்றப்பட்ட பயிற்சி மருத்துவர்கள்

2 mins read
dec7ca29-a248-4ff6-aa37-7c412c8238b7
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள். படம்: ஊடகம் -

2,500 மருத்துவர்கள் கைதாகி விடுதலை; நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு

புது­டெல்லி: மருத்­துவ மேற்­ப­டிப்­புக்­கான கலந்­தாய்வை உட­ன­டி­யாக நடத்த வலி­யு­றுத்தி பயிற்சி மருத்­து­வர்­கள் டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இத­னால் அங்­குள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் புற­நோ­யா­ளி­கள் பிரிவு மூடப்­பட்­டது. நோயா­ளி­கள் பலர் சிகிச்சை பெற முடி­யா­மல் தவிப்­புக்கு ஆளா­கி­னர்.

போராட்­டத்­தில் ஈடு­பட்ட பயிற்சி மருத்­து­வர்­களை காவல்­து­றை­யி­னர் குண்­டு­க்கட்­டாக அப்­பு­றப்­ப­டுத்திய­தால் இரு­த­ரப்­புக்கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. அப்­போது ஏழு காவ­லர்­கள் காய­ம­டைந்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

நீதி­மன்ற வழக்கு கார­ண­மாக மருத்­துவ முது­நிலை கலந்­தாய்வு நிறுத்திவைக்­கப்­பட்டுள்ளது. இதற்கு பயிற்சி மருத்­து­வர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் உள்ள ஷாஹீன் பூங்­கா­வில் இருந்து உச்ச நீதி­மன்­றத்தை நோக்கி பயிற்சி மருத்­து­வர்­கள் பேர­ணி­யா­கச் செல்ல முயன்­ற­னர். அப்­போது காவல்­து­றை­யி­னர் அவர்­க­ளைத் தடுத்து நிறுத்­தி­னர். அப்­போது முன்­வ­ரி­சை­யில் இருந்த மருத்­து­வர்­கள் குண்­டுக்­கட்­டாக அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட போது இரு­த­ரப்­புக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. அங்­கி­ருந்த வாக­னங்­க­ளின் கண்­ணா­டி­கள் உடைக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து, காவ­லர்­களைப் பணி செய்ய விடா­மல் தடுத்­த­தா­கக் கூறி 12 மருத்­து­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். மேலும், பேர­ணி­யா­கச் செல்ல முயன்ற மருத்­து­வர்­களும் அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இது குறித்து தக­வல் அறிந்த டெல்லி முழு­வ­தும் உள்ள மருத்­து­வர்­கள், வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். நேற்று முன்­தி­னம் இரவு சுமார் நான்­கா­யி­ரம் மருத்­து­வர்­கள் டெல்லி சரோ­ஜினி நகர் காவல் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு மத்­திய அர­சுக்கு எதி­ராக கண்­டன முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

மேலும், கைது செய்­யப்­பட்டு அக்­கா­வல் நிலை­யத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த 12 மருத்­து­வர்­களை விடு­விக்­க­வும் வலி­யு­றுத்தி தேசிய கீதத்தைப் பாடி­னர்.

பயிற்சி மருத்­து­வர்­கள் மீது காவல்­து­றை­யி­னர் தடி­யடி நடத்­தி­ய­தா­க­வும் இது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் இந்­திய மருத்­து­வக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

மேலும், நாடு தழு­விய அள­வில் மருத்­து­வர்­க­ளின் வேலை நிறுத்­தப் போராட்­டத்­துக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளது.

மருத்­துவ மேற்­ப­டிப்­புக்­கான கலந்­தாய்வு தாம­த­மா­வ­தால் பல்வேறு வகை­களில் தங்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக பயிற்சி மருத்­து­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

கடந்த ஒரு மாத கால­மாக வெவ்­வேறு வகை­யில் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்த மருத்­து­வர்­கள் நேற்று முன்­தி­னம் உச்ச நீதி­மன்­றத்தை நோக்கி பேர­ணி­யா­கச் செல்ல முயன்­ற­னர்.

போராட்­டத்­தில் ஈடு­பட்ட 2,500 மருத்­து­வர்­கள் கைது செய்­யப்­பட்டு நள்­ளி­ர­வில் விடு­விக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. மேலும், பல மருத்­து­வர்­கள் தங்­க­ளது கைபே­சி­களை காவ­லர்­கள் பறித்­துக்­கொண்­ட­தாக புகார் எழுப்­பி­யுள்­ள­னர்.

போராட்­டத்­தின்­போது பெண் மருத்­து­வர்­களை காவ­லர்­கள் குண்டுக்­கட்­டாகத் தூக்­கிச் சென்ற­போது சில மருத்­து­வர்­கள் அதை கைபே­சி­யில் காணொ­ளி­யா­கப் பதிவு செய்ய முயன்­ற­னர். இதை­ய­டுத்து, அவர்­க­ளது கைபே­சி­கள் பறிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.