கர்நாடகா: 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை

கர்நாடகா: 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை

1 mins read
8e956006-ddc7-4650-8bf0-7e5b5b655937
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் காலி­யாக உள்ள 115 உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­கான வாக்­குப்­ப­திவு நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. தேர்­த­லில் பதி­வான வாக்­கு­கள் நாளை எண்­ணப்­ப­டு­கின்­றன.

வாக்­குப்­ப­திவு விறு­வி­றுப்­பாக நடை­பெற்­றது என்­றும் பெரிய அசம்­பா­வித சம்­ப­வங்­கள் ஏது­மின்றி தேர்­தல் அமை­தி­யாக நடந்து முடிந்­தது என்­றும் மாநி­லத் தேர்­தல் அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் காலி­யாக உள்ள ஐந்து நகர சபை­கள், 19 புற சபை­கள், 34 பட்­ட­ணப் பஞ்சாயத்து என்று மொத்­தம் 58 நகர உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­கும் 57 கிரா­மப் பஞ்­சா­யத்­து­க­ளுக்­கும் என மொத்­தம் 115 உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு நேற்று முன்­தி­னம் தேர்­தல் நடை­பெற்­றது. மொத்­தம், 2,063 வார்­டு­களில் வாக்­கு­கள் பதி­வா­கின. 4,000 வேட்­பா­ளர்­கள் களத்­தில் உள்­ள­னர்.

வாக்­குப்­ப­திவு விறு­வி­றுப்­பாக நடை­பெற்­ற­தா­க­வும் பொது­மக்­கள் ஆர்­வத்­து­டன் நீண்ட வரி­சை­களில் காத்­தி­ருந்து வாக்­க­ளித்­த­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்­மை­யில் மகா­ராஷ்­டிரா மேல­வை­யில் காலி­யாக உள்ள இடங்­க­ளுக்கு நடை­பெற்ற தேர்­தலில் பாஜக அதிக இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. மேற்கு வங்­கத்­தில் கோல்­கத்தா மாந­க­ராட்­சிக்கு நடை­பெற்ற தேர்­த­லில் ஆளும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றது. சண்­டி­கர் மாந­க­ராட்சித் தேர்­த­லில் ஆம் ஆத்மி கட்சி முத்திரை பதித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கர்­நா­டக உள்­ளாட்­சித் தேர்­தல் முடி­வு­கள் அர­சி­யல் களத்­தில் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­படுத்தி உள்­ளன.