சவூதி அரேபியா-இந்தியா இடையே விமானப் பயண ஏற்பாடு

சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பான விமானப் பயண வளையத்தை (Air Travel Bubble) தொடங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் நேரடி விமானச் சேவைகள் தொடங்கும்.

தற்போது, சவூதிக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணம் செய்வோர், வளைகுடா நாடுகள் வழியாகவே பயணம் செய்ய முடிகிறது.

இதன் தொடர்பில், சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம், டிசம்பர் 24ஆம் தேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.

“இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே ஜனவரி 1, 2022 முதல் விமானப் பயண வளைய ஏற்பாட்டைத் தொடங்குவதைத் தூதரகம் பெருமிதத்துடன் அறிவிக்கிறது,” என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.

சவூதியில் வேலை செய்யும் இந்தியர்களுக்கும் அங்கு உம்ரா யாத்திரை செல்லவிருப்போருக்கும் இந்த அறிவிப்பு நற்செய்தியாக அமைகிறது.

இப்போது சவூதி அரேபியாவையும் சேர்த்து, சிங்கப்பூர் உட்பட 34 நாடுகளுடன் இந்தியா பயண ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!