ரூ.150 கோடி வரி ஏய்ப்பு

ரூ.150 கோடி வரி ஏய்ப்பு

1 mins read
1268cd88-c58f-457e-a2d4-b476f753b611
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் வரு­மா­ன­வ­ரித்­துறை நடத்­திய சோத­னை­யில் கணக்­கில் காட்­டா­மல் ரூ.150 கோடி அள­வி­லான வரி­ஏய்ப்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வின் நந்­தர்­பர் நாசிக், துலே பகு­தி­களில், சொத்­துச் சந்தை தொழி­லில் ஈடு­படும் இரு குழு­மங்­க­ளுக்கு சொந்­த­மான 25க்கும் மேற்­பட்ட இடங்­களில், வரு­மான வரித்­து­றை­யி­னர் சோதனை நடத்­தி­னர்.

அப்­போது பல போலி ஆவ­ணங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. செல­வி­னங்­களைக் கூடு­த­லாக கணக்கு காட்டி, வரு­வா­யைக் குறை­வாக கணக்கு காட்­டி­யுள்­ள­னர்.

குடும்ப உறுப்­பி­னர்­கள், ஊழி­யர்­கள் பெய­ரில் துணை ஒப்­பந்­தங்­கள் போலி­யாக கொடுக்­கப்­பட்­டுள்­ளன. முறை­கே­டு­கள் மூலம் ரூ.150 கோடி அள­வி­லான வரு­மா­னத்தை இந்த குழு­மங்­கள் கணக்­கு­காட்­ட­வில்லை. நிலப் பரி­வர்த்­த­னை­கள், ரொக்­கக் கடன்­கள் ரூ.52 கோடி மதிப்­பில் நடந்­துள்­ளன. இவை கணக்­கில் காட்­டப்­ப­ட­வில்லை. இதற்­கான ஆவ­ணங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. கணக்­கில் காட்­டப்­ப­டாத ரூ.5 கோடிக்­கும் மேற்­பட்ட ரொக்­கப்­ப­ணம், நகை­களும் இந்த சோத­னை­யில் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இது தொடர்­பாக மேலும் விசா­ரணை நடக்­கிறது.