ரூ.17,500 கோடியில் பணிகள்

ரூ.17,500 கோடியில் பணிகள்

1 mins read
61555d7c-d118-4a7a-ba77-4d2f7e5aed6c
வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி. -

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

டேரா­டூன்: உத்­த­ர­காண்ட் மாநி­லத் திற்கு நேற்று வரு­கை­ய­ளித்த பிர­த­மர் மோடி, ரூ.17,500 கோடி மதிப்பு­உள்ள வளர்ச்­சிப் பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­னார்.

அந்த மாநி­லத்­தில் 70 இடங்­களை கொண்ட சட்­ட­ச­பைக்கு அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் தேர்­தல் நடக்­கிறது.

இதில், பாஜக, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட முக்­கிய கட்­சி­கள் போட்­டி­யிட உள்­ளன.

ஆட்­சியை தக்­க­வைத்­துக்­கொள்ள பாஜ­க­வும் ஆட்­சி­யைக் கைப்­பற்ற காங்­கி­ர­சும் தீவிர முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இத­னால் தேர்­தல்­க­ளம் சூடு பிடிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

திரி­ணா­முல் காங்­கி­ரஸ் மற்­றும் ஆம் ஆத்மி உள்­ளிட்ட கட்­சி­களும் உத்­த­ர­காண்ட் சட்­ட­சபை தேர்­த­லில் கள­மி­றங்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இதற்­கி­டை­யில், தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் பல்­வேறு வளர்ச்­சித் திட்­டப்­ப­ணி­களை பாஜக அரசு மேற்­கொண்டு வரு­கிறது.

இந்த நிலை­யில் உத்­த­ர­காண்­டில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள பிர­த­மர் மோடி, அம்­மா­நி­லத்­தில் நேற்று 17,500 கோடி ரூபாய் மதிப்­பி­லான வளர்ச்சி திட்­டப்­ப­ணி­ க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­னார்.

அம்­மா­நி­லத்­தின் நைனி­தல் மாவட்­டம் ஹல்ட்­வானி பகு­தி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய அவர், இந்த 10 ஆண்டு காலத்தை உத்­த­ர­காண்ட் மாநி­லத்­திற்­கா­ன­தாக மாற்­று­வ­தில் அரசு கவ­ன­மாக உள்­ளது என்­றார். வெவ்­வேறு வளர்ச்சி திட்டப் பணி­கள் மூலம் இதை சாத்­தி­யப்­ப­டுத்த உள்­ளோம். இந்த 10 ஆண்­டு­களை உத்­த­ர­காண்ட் மாநி­லத்­திற்­கான 10 ஆண்­டாக மாற்ற மாநில மக்­க­ளுக்கு திறமை உள்­ளது' என்­றார்.