ராய்ப்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தைச் ேசர்ந்த பிரபல சாமியார் காளிசரண் மகாராஜ், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப் பூரில் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில் மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையைப் பயன்படுத்தினார். மேலும் மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற கோட்சேவை வணங்குகிறேன் என்று அவர் பாராட்டிப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள வேளையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்ததால் அவர் மீது ராய்ப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கி யிருந்த காளிசரண் மகாராஜை, சத்தீஸ்கர் காவல்துறையின் பத்து பேர் கொண்ட காவல்துறைக்குழு, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்துள்ளது.
இந்த நிலையில் "மத்தியப்பிரதேச மாநில காவல்துறையிடம் உரிய தகவல் தெரிவிக்காமல் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், காளிசரணைக் கைது செய்துள்ளது. இதன்மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான நெறிமுறைகளை அது மீறியுள்ளது," என்று மத்தியபிரதேச மாநில ஆளும் பாஜக அரசு தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், "காளிசரண் மகாராஜை கைது செய்தது குறித்து சத்தீஸ்கர் போலிசார் அவரது குடும்பத்தினருக்கும் வழக்கறிஞருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும், 24 மணி நேரத்திற்குள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்," என்றார்.
மகாத்மா காந்தியை இழிவு படுத்தியவர் கைது செய்யப்பட்டதில், மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான நரோத்தம் மிஸ்ராவுக்கு மகிழ்ச்சியா அல்லது வருத்தமா? என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

