வைகுண்ட ஏகாதசி; ஏழுமலையான் பக்தர்களுக்கு புதிய ஏற்பாடு, புதிய கட்டுப்பாடு

வைகுண்ட ஏகாதசி; ஏழுமலையான் பக்தர்களுக்கு புதிய ஏற்பாடு, புதிய கட்டுப்பாடு

2 mins read
9e0cf618-7c59-4f40-aac3-343bdeddc14f
-

அம­ரா­வதி: ஆந்­திர மாநி­லம் திரு­ம­லை­யில் உள்ள ஏழு­ம­லை­யா­னைத் தரி­சிக்க நாள்­தோ­றும் ஆயி­ரக்­ கணக்­கான பக்­தர்­கள் வரு­வ­தால் கிரு­மிப் பர­வ­லைக் கருத்­தில் கொண்டு கோயில் நிர்வாகம் விதி­மு­றை­களை அடிக்­கடி மாற்றி வரு கிறது.

தற்­போது ஓமிக்­ரான் கிருமி புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்ப தால் பக்­தர்­க­ளுக்குப் பல்­வேறு கட்டுப்பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் வரும் ஜன­வரி 13ஆம் தேதி அன்று திரு­ மலை­யில் உள்ள ஏழு­ம­லை­யான் கோயி­லில் வைகுண்ட ஏகா­தசி தரி­ச­னம் நடை­பெ­று­கிறது.

இத­னால் ஜன­வரி 13 முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்­க­ளுக்கு சொர்க்க வாசல் தரி­ச­னத்­திற்கு பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். 13ஆம் தேதி நள்­ளி­ரவு 12 மணி முதல் அதி­காலை 2 மணி வரை திருப்­பாவை பாமாலை, அர்ச்­சனை, நெய்­வேத்­தி­யம் சமர்­ப்பித்து பூஜை­கள் நடை­பெ­றும்.

இரண்டு மணிக்கு சொர்க்க வாசல் திறக்­கப்­பட்டு முக்­கிய பிர­மு­கர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

காலை 9 மணி முதல் ரூ.300 சிறப்பு தரி­சன நுழை­வுச் சீட்டு, இல­வச தரி­ச­னம், கல்­யாண உற் ­ச­வம், ஆர்­ஜித பிர­மோற்­ச­வம், சகஸ்­கர தீப அலங்­கார சேவை நுழை­வுச்சீட்டுகளை இணை­யம் வழி­யாகப் பெற்­ற­வர்­கள் தங்­க­ளுக்கு ஒதுக்­கப் பட்ட நேரத்­தில் தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை­யொட்டி சிறப்பு கட்­டண தரி­சன டிக்­கெட்டுகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன.

இதே­போல் தேவஸ்­தா­னத்­திற்கு உட்­பட்ட நாரா­ய­ண­வ­னம், நாக­லா­பு­ரம், கார்­வேட்டி நக­ரம், நகரி உள்­ளிட்ட கோயில்­க­ளி­லும் வைகுண்ட ஏகா­த­சியை முன்­னிட்டு சொர்க்க வாயில் திறக்­கப்­பட உள்­ளது. இதை காண ஏரா­ள­மான பக்­தர்­கள் வரு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனவே திருப்­பதி தேவஸ்­தான கோயில்­களில் கிரு­மிப் பர­வ­லுக்கு இடம்­கொ­டுக்­காத வகை­யில் முக்­கிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது, பக்­தர்­கள் கொவிட்-19 தடுப்­பூ­சியை இரண்டு முறை போட்­டுக்கொண்­ட­தற்­கான சான்­றி­தழ் அல்­லது கொவிட்-19 பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்­ப­தைக் காட்­டும் சான்­றி­தழை தங்­க­ளு­டன் கட்­டா­யம் கொண்டு வர வேண்­டும் என்று கோயில் நிர்­வா­கங்­கள் அறி­வித்­துள்­ளன.

இதற்­காக அனைத்து கோயில்­ க­ளி­லும் பாது­காப்பு அதி­கா­ரி­கள் பணி­யில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

அவர்­கள் பக்­தர்­க­ளின் தடுப்­பூசி சான்­றி­தழை சரி­பார்த்த பின்­னரே கோயி­லுக்­குள் செல்ல அனு­ம­திக்கப் ­ப­டு­வர் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.