பெண்­க­ளுக்கு எதிராக 31,000 குற்­றங்­கள்

2 mins read
a29a5bef-45ef-4f37-9090-00dd024cc568
-

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் கடந்த 2021ஆம் ஆண்­டில் மட்­டும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் சுமார் 31,000 பதி­வா­கி­யி­ருப்­ப­தா­க­வும் 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை பார்த்­தி­ராத எண்­ணிக்­கை இது என்­றும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­தி­யா­வின் தேசிய மனித உரி­மை­கள் ஆணை­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில், நாட்­டில் 2021ஆம் ஆண்­டில் மட்­டும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் 31,000 பதி­வா­கி­யுள்­ளன. இவற்­றில், பாதிக்­கும் மேற்­பட்ட வழக்­கு­கள் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் பதி­வா­கி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

31,000த்தில் 11,013 வழக்­கு­கள் பெண்­க­ளுக்கு உணர்­வு­பூர்­வ­மாக பாதிப்பை ஏற்­ப­டுத்­து­தல் போன்­றவை. வீட்­டில் நடக்­கும் வன்­முறை தொடர்­பாக 6,633 வழக்­கு­களும் வர­தட்­ச­ணைக் கொடுமை நிகழ்ந்­த­தாக 4,589 வழக்­கு­களும் பதி­வா­கி­யுள்­ளன.

நாட்­டி­லேயே அதி­க­பட்­ச­மாக உத்­த­ரப் பிர­தே­சத்­தில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றச் சம்­ப­வங்­கள் 15,828 ஆகப் பதி­வா­கி­யுள்­ளன. இதைத் தொடர்ந்து டெல்­லி­யில் 3,336 ஆக­வும் மகா­ராஷ்­டி­ரத்­தில் 1,504, ஹரி­யா­னா­வில் 1,460 மற்­றும் பீகா­ரில் 1,456 வழக்­கு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

2020ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் கடந்த ஆண்டு பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் தொடர்­பான புகார்­கள் 30 விழுக்­காடு அதி­க­ரித்­தன. 2020 முழு­வ­தும் 23,722 புகார்­கள் பதி­வா­யின.

குறிப்­பாக, 2014ஆம் ஆண்­டுக்­குப் பிறகு பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் பெரு­கி­விட்­டதை ஆணை­யத்­தின் அறிக்கை உணர்த்­துகிறது. 2014ல் நடை­பெற்ற பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை 33,906.

தங்­க­ளுக்கு எதி­ரான கொடுமை குறித்து துணிச்­ச­லு­டன் புகார் தெரி­விக்­கும் பெண்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் புகார்­க­ளைத் தெரி­விக்க பல்­வேறு தளங்­கள் இருப்­ப­தும் இந்த எண்­ணிக்கை அதி­க­ரிப்­புக்­கான முக்­கிய கார­ணங்­க­ளா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

டெல்­லி­யில் இளம்­பெண்ணை

சீர­ழித்த மூவர்

டெல்லி நக­ரின் புத்த விகார் பகு­தி­யில் 21 வய­துப் பெண்ணை கூட்டு பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக தொழிற்­சாலை அதி­பர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப் பட்­டுள்­ள­னர். வியா­ழக்­கி­ழமை மாலை உடற்­ப­யிற்­சிக்­கூ­டம் ஒன்றி னுள் மூன்று மணி நேரம் தம்மை சீர­ழித்­த­தாக அப்­பெண் தமது கணவ ரிடம் தெரி­வித்­த­தைத் தொடர்ந்து காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­யப் பட்­டது.

பாதிக்கு மேற்­பட்ட புகார்­கள் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் பதி­வா­னவை