கால்வாயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த யானைகள்

கால்வாயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த யானைகள்

1 mins read
bc8e9510-2a1a-4cad-9744-18581d747e08
கால்வாயில் இருந்து வெளியேற முயன்ற யானைகள். படம்: ஊடகம் -

மைசூரு: கால்­வாய்க்­குள் இறங்­கிய காட்டு யானை­கள் அதி­லி­ருந்து வெளி­யேற முடி­யா­மல் தவித்­ததை அடுத்து, வனத்­துறை ஊழி­யர்­கள் அவை வெளி­யேற உத­வி­னர்.

மைசூரு மாவட்­டத்­தில் உள்ள நாக­ர­ஒலே வனப்­ப­கு­தி­யில் ஏரா­ள­மான யானை­கள் உள்­ளன. மற்ற விலங்­கு­களும் அதி­க­மாக இருப்­ப­தால், அவை அவ்­வப்­போது அருகே உள்ள கிரா­மங்­க­ளுக்­குள் புகுந்து வெளி­யே­று­வது வாடிக்­கை­யாக உள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் ஐந்து காட்டு யானை­கள் வனப்­பகு­திக்கு அருகே உள்ள கிரா­மத்­துக்­குள் நுழைந்து, தண்­ணீ­ரும் உண­வும் தேடி அலைந்­துள்­ளன.

பீதி அடைந்த கிராம மக்­கள் பட்­டா­சு­களை வெடித்து யானை­களை விரட்ட முற்­பட்­ட­போது, அவை கிரா­மத்­துக்கு வெளியே அமைக்­கப்­பட்­டுள்ள கால்­வா­யில் இறங்­கின.

அங்கு சிறிது நேரம் தண்ணீர் குடித்தும் விளையாடியும் மகிழ்ந்த யானைகளால் பின்னர் கால்வாயில் இருந்து வெளியேற முடியவில்லை.

கிராம மக்­கள் உரக்க கூச்­ச­லிட்­ட­தால் செய்­வ­த­றி­யா­மல் யானை­கள் ஆவே­ச­ம­டைய, தக­வல் அறிந்து விரைந்து வந்த வனத்­து­றை­யி­னர், கிராம மக்­களை அமை­திப்­ப­டுத்தி யானை­கள் வெளி­யேற உத­வி­னர்.

யானை­கள் கால்­வா­யில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் தவித்த காட்­சி­யைக் காணொ­ளி­யா­கப் பதிவு செய்த பலர், அதை சமூக வலைத்­தளங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்­த­னர்.

முன்­ன­தாக, யானை­கள் மிர­ளும் வகை­யில் எந்த நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­பட வேண்­டாம் என கிராம மக்­க­ளுக்கு வனத்­து­றை­யி­னர் அறி­வு­றுத்­தி­னர். அப்­போது வன விலங்­கு­கள் அடிக்­கடி ஊருக்­குள் புகுந்து அச்­சு­றுத்தலை ஏற்­ப­டுத்­து­வ­தாக கிராம மக்­கள் வனத்­து­றை­யி­ன­ரி­டம் தெரி­வித்தனர்.