194,720 பேருக்குத் தொற்று

194,720 பேருக்குத் தொற்று

2 mins read
b71344fd-ce35-4b55-aa88-f53a5ec88f28
-

இந்தியாவில் தொற்று புதிய உச்சம்; ஆந்திராவில் ஊரடங்கு அறிவிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஒரே நாளில் ஏறக்­கு­றைய 194,720 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

கடந்த 24 மணி நேரத்­தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக நேற்­றுக் காலை மத்­திய சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்ட தக­வ­லில் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் கிரு­மித் தொற்­றி­லி­ருந்து 60,405 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

ஒரே நாளில் 442 பேர் மர­ணம் அடைந்­துள்­ள­னர்.

தற்­போது நாடு முழு­வ­தும் பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் 9,55,319 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

ஒரு பக்­கம் கிரு­மித்­தொற்று 3வது அலை சுழன்று அடிக்­கும் நிலை­யில் மறு­பக்­கம் ஓமிக்­ரான் பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இந்­தி­யா­வில் உரு­மாற்றம் அடைந்த 'டெல்டா' கிரு­மி ­யால் 2வது அலை உரு­வா­னது. தற்­போது ஓமிக்­ரான் கிருமி 3வது அலை­யாக உரு­வா­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே ஓமிக்­ரான் தொற்று வேகம் அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று முன்­தின நில­வ­ரப்­படி இந்­தி­யா­வில் 4,461 பேர் ஓமிக்­ரா­னால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் நேற்று 4,868ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அதே வேளை­யில் தொற்­றி­லிருந்து 1,805 பேர் குண­ம­டைந்து உள்­ள­னர். மகா­ராஷ்­டி­ரா­வில் அதி­க­பட்­ச­மாக 1,281 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ராஜஸ்­தா­னில் 645 பேரும் டெல்­லி­யில் 546 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மற்­றொரு நில­வ­ரத்­தில் ஆந்­தி­ரா­வில் தொற்­றுப் பர­வலை கட்­டுப் ­ப­டுத்­து­வது குறித்து அம­ரா­வ­தி­யில் உள்ள தலை­மைச் செய­ல­கத்­தில் அம்­மா­நில முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி தலை­மை­யில் ஆலோ­சனைக் கூட்­டம் நடந்­தது.

இதில் திரை­ய­ரங்­கு­கள், கடைத் தொகு­தி­கள் 50 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே அனு­ம­திக்க வேண்­டும் என்று முடிவு செய்­யப்­பட்­ட­தாக தெரி­கிறது.

மேலும் ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பையொட்டி ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வரு கின்றனர்.

இந்த நிலையில் வருகிற 18ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.