உ.பி.யில் 2வது அமைச்சர் விலகல்

உ.பி.யில் 2வது அமைச்சர் விலகல்

2 mins read
0e8a5063-b489-4da7-aa0d-6fa080b589d8
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கும் வேளை­யில் அடுத் ­த­டுத்து திருப்­பங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அந்­தத் திருப்­பங்­கள் பார­திய ஜன­தா­வுக்கு எதி­ரா­க­ அமைந்து வரு­கின்­றன.

கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் உத்­த­ரப்­பி­ர­தேச மாநில பாஜக அர­சின் அமைச்­ச­ர­வை­யில் இடம் பெற்­றி­ருந்த அமைச்­சர்­கள் இரு­வர் அடுத்­த­டுத்து கட்­சி­யி­லி­ருந்து விலகி இருப்­பது அந்த மாநில அர­சி­ய­லில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தியுள்­ளன.

முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் அமைச்­ச­ர­வை­யில் வனத்­துறை அமைச்­சர் பொறுப்­பில் இருந்த தாரா சிங் சவு­கான் பாஜ­க­வி­லி­ருந்து விலகியுள்­ளார். பாஜக அமைச்­ச­ர­வை­யில் அங்கம் வகித்த சுவாமி பிர­சாத் மவு­ரியா கட்­சி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வில­கிய நிலை­யில் தாரா சிங்­கும் வில­கி­யுள்­ளார்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் 403 சட்­ட­மன்­றத் தொகு­தி­களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

வரும் பிப்­ர­வரி 10 முதல் மார்ச் 10 வரை ஏழு கட்­டங்­க­ளாக அங்கு தேர்­தல் நடை­பெ­று­ம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக, சமாஜ்­வாதி, பகு­ஜன் சமாஜ், காங்­கி­ரஸ் ஆகி­யவை தேர்­த­லில் போட்­டி­யி­டும் முக்­கிய கட்­சி­ க­ளா­கும்.

பதவி வில­கிய தாரா சிங், "பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள், தலித் மக்­கள், விவ­சா­யி­கள் மற்­றும் வேலை வாய்ப்­பில்­லா­மல் தவித்து வந்த இளை­ஞர்­களை அரசு சரி­யாக நடத்­த­வில்லை," என்று தனது பதவி வில­கல் கடி­தத்­தில் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

விரை­வில் அகி­லேஷ் யாதவ் தலை­மை­யி­லான சமாஜ்­வாதி கட்­சி­யில் அவர் சேர்­வார் என எதி­பார்க்­கப்படு­கிறது.

அதற்கு ஏற்ப அவ­ரு­டன் இருக்­கும் புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்ள அகி­லேஷ் யாதவ், "சமூக நீதிக்­காக குரல் கொடுத்து வரும் தாரா சிங் சவு­கானை வர­வேற்­கி­றோம்" என தெரி­வித்­துள்­ளார்.

தற்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது.