இன்று சொர்க்கவாசல் திறப்பு

இன்று சொர்க்கவாசல் திறப்பு

1 mins read
8d51613a-8c62-479b-aeb8-13e713e99ff0
-

திருப்­பதி: வைகுண்ட ஏகா­த­சி­யை­யொட்டி திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோயி­லில் இன்று அதி­காலை 4 மணிக்கு ொர்க்­க­வா­சல் திறக்­கப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து வைகுண்ட வாசல் வழி­யாக காலை 7 மணிக்கு 'விஐபி' பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்­கப் படு­கின்­ற­னர்.

பிறகு காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழு­ம­லை­யான் அலங்­க­ரிக்­கப்­பட்ட வாக­னத்­தில் நான்கு மாட வீதி­களில் உலா வரு­கி­றார். காலை 9 மணிக்கு சாதா­ரண பக்­தர்­கள் சொர்க்­க­வா­சல் வழி­யாக தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இம்­மா­தம் 22ஆம் தேதி வரை 10 நாட்­கள் சொர்க்­க­வா­சல் வழி­யாக பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சொர்க்கவாசல் திறப்பை யொட்டி இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை 10 நாள் களுக்கு ரூ.300 கட்டண தரி சனத்தில் 12,000 பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10,000 பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5,000 பேர் என மொத்தம் 27,000 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.