புதுடெல்லி: அண்மையில் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி, விவசாயிகளின் போராட்டத்தால் சுமார் 20 நிமிடங்களாக பாலத்திலே காத்திருக்க நேரிட்டது. பின்னர் அவர் பயணத்தை ரத்து செய்து டெல்லி திரும்பிவிட்டார்.
இதனைச் சுட்டிக்காட்டி யிருந்த பூப்பந்து வீராங்கனையும் பாஜக ஆதரவாளருமான சாய்னா நேவால், "எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தை களில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
சாய்னாவின் இந்தப் பதிவுக்கு நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று பதில் கூறியிருந்தார்.
இந்தப் பதிவை ஆபாசமான வார்த்தைகளால் அவரின் டுவிட் டரில் தெரிவித்ததை அடுத்து கண்டனங்கள் எழுந்தன.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தமிழ் சினிமாவின் சின்மயி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா போன்ற பலர் நடிகர் சித்தார்த்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இது குறித்து தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளது. இந்த நிலையில் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மன்னிப்புக் கடிதத்தில் "சரியாக புரிந்துகொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோரு கிறேன். எனது 'டுவிட்' வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள் நோக்கம் கொண்டதல்ல," என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நாகரிகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாகவும் நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
"ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. தங்களது டுவிட்டுக்குப்பதிலாக நான் பதி விட்ட வார்த்தைகளை நியாயப் படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள்தான் என் சாம்பியன்," என்று தனது கடிதத்தில் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

