தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தை மறுமணம் செய்ய முயற்சி; ஆத்திரத்தில் கொன்ற மகன்

2 mins read
0d1c1b47-2920-48b5-a2a8-8a4d69cc7bb8
-

புனே: மகா­ராஷ்­டிரா மாநி­லம் புனே­வில் நடந்த சம்­ப­வத்­தில் எண்­பது வயது தந்­தையை மகனே கொன்று­ விட்­டார்.

புனே­வில் ராஜ்­கு­ரு­ந­கர் பகு­தி­யைச் ேசர்ந்த 80 வயது சங்­க­ரின் மனைவி பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு இறந்­து­விட்­டார்.

மகன் சேகர் வீட்­டில் அவர் வசித்து வந்­தார். சேக­ருக்கு மனைவி, மூன்று குழந்­தை­கள் உள்­ள­னர். சங்­கர் தன்­னு­டைய பெரும்­பான்­மை­யான நேரங்­களை செய்­தித்­தாள் வாசிப்­ப­தி­லும் கை பே­சி­யைப் பார்ப்­ப­தி­லும் செல­வழித்து வந்­தார்.

சில மாதங்­க­ளாக செய்­தித்­தாள்­களில் வெளி­யா­கும் திரு­ம­ணத் தக­வல்­களை அவர் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணித்து வந்­தார்.

இந்நிலையில் சில தக­வல் மையங்­களில் தனது பெயரை அவர் பதிவு செய்­தி­ருப்­ப­தாக சேக­ரின் மனைவி சேக­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை அன்று சேகர் மதிய உண­விற்­காக தன்­னு­டைய வீட்­டிற்கு வந்­த­போது வீட்­டில் அவ­ரது தந்தை மட்­டும் தனி­யாக இருந்­துள்­ளார். அப்­போது சேகர், அவ­ரி­டம் திரு­ம­ணத் தக­வல் மையத்­தில் பெயர் பதிவு செய்­துள்­ளீர்­களா? என்று கேட்­டுள்­ளார்.

அதை அவ­ரது தந்தை மறுத்­துள்­ளார். அப்­போது அவ­ரது கைபே­சியை வாங்கிப் பார்த்­த­போது அவர் திரு­ம­ணத் தக­வல் மையத்­தில் பதிவு செய்­தி­ருப்­ப­தும் அதற்­கான கட்­ட­ணம் செலுத்­தி­யி­ருப்­ப­தும் தெரிய வந்­தது.

இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த சேகர், அவ­ரு­டைய 80 வயது தந்­தையைக் கத்­தி­யால் கொல்ல முயற்சி செய்­துள்­ளார்.

பின்பு கல்­லைக் கொண்டு பல­மாக தலை­யில் அடித்து தந்­தையை அவர் கொலை செய்­துள்­ளார்.

இதை­ய­டுத்து காவல் நிலை­யத்­தில் தன்­னு­டைய தந்­தையைக் கொலை செய்துவிட்­ட­தாகக் கூறி சேகர் சரண் அடைந்தார்.

இது குறித்து வழக்­குப் பதிவு செய்­துள்ள காவல்­துறை, அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.