எல்லையில் சீனா அச்சுறுத்தல்; காத்திருக்கும் 400 பயங்கரவாதிகள்

எல்லையில் சீனா அச்சுறுத்தல்; காத்திருக்கும் 400 பயங்கரவாதிகள்

2 mins read
331a153a-5d16-48b8-9f4b-cbbea62cb25f
-

தளபதி நரவனே: மறைமுக போர் நீடிக்கிறது; இந்திய ராணுவம் எதையும் சமாளிக்கும்

புது­டெல்லி: லடாக் உள்­ளிட்ட எல்­லைப் பகு­தி­களில் சீனா­வின் அச்­சு­றுத்­தல் இன்­னும் குறை­ய­வில்லை என இந்­திய ராணு­வத் தலைமைத் தள­பதி எம்.எம். நர­வனே (படம்) தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, எல்­லை­யில் நில­வும் பதற்­றத்­தைக் குறைப்பது தொடர்­பாக இந்­தியா, சீனா இடை­யே­யான 14வது கட்ட பேச்­சு­வார்த்தை ஆக்­கப்­பூர்­வ­மாக நடை­பெற்ற போதிலும் குறிப்­பி­டத்­தக்க முன்னேற்­றம் ஏதும் இல்லை என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

லடாக் எல்­லைப் பகு­தி­யில் இருந்து இரு தரப்­பும் இன்­னும் படை­க­ளைத் திரும்­பப்­பெ­றாத நிலை­யில், பேச்­சு­வார்த்தை நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தளபதி எம்.எம்.நரவனே, அனைத்துவித சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்றார்.

சீனா, பாகிஸ்­தான் நாடு­களில் இருந்து எழும் அச்­சு­றுத்­தல்­களை ஒரு­சேர சமா­ளிக்க இந்­திய ராணு­வம் மறுவரையறை செய்­யப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், "சீனா­வின் புதிய நில எல்­லைச்­சட்­டத்­தின் கீழ் ஏற்­ப­டக்­கூ­டிய எந்­த­வொரு ராணுவ மாற்­றங்களை­யும் சமா­ளிப்­ப­தற்கு இந்­திய ராணு­வம் போது­மான அள­வில் தயா­ராக உள்­ளது என்றார்.

"கிழக்கு லடாக் எல்­லைப்­பகுதி­யில் சீன ராணு­வத்தை நாம் உறு­தி­யு­டன் எதிர்­கொள்­வோம். உரிய பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

"தற்­போ­தைய எல்லையை சீனா ஒரு­த­லைப்­பட்­ச­மாக மாற்­று­வதற்கு முயற்­சி செய்­தால், இந்­தி­யப் படை­கள் அதற்கு வலு­வான முறை­யில் பதி­ல­டி ­கொ­டுக்­கும்," என்று தள­பதி எம்.எம்.நர­வனே திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வுக்­குள் ஊடு­ரு­வும் வகை­யில் பாகிஸ்­தான் எல்­லை­யில் சுமார் 400 பயங்­க­ர­வா­தி­கள் வரை முகாம்­களில் தயா­ராக உள்­ள­தா­க­வும் உள­வுத்­துறை மூலம் இத்­த­க­வல் கிடைத்­துள்­ளது என்­றும் தள­பதி நர­வனே தெரி­வித்­தார்.

மறை­முகப் போர் நீடித்து வரு­வ ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அச்­சுறுத்­தல் இன்­னும் குறை­ய­வில்லை என்­றார்.

எனவே, இந்­திய ராணு­வம் தொடர்ந்து எச்­ச­ரிக்­கை­யு­ட­னேயே இருக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் அச்­சு­றுத்­தலை புறந்­தள்ள முடி­யாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, பூடான் உட­னான சர்ச்­சைக்­கு­ரிய எல்லைப் பகு­தி­யி­லும் ஆறு இடங்­களில் சீன ராணு­வம் அத்­து­மீ­றி­யுள்­ளது.

அங்கு இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட புதிய கட்­டு­மான பணி­களை சீனத் தரப்பு மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சீனா­வின் இந்த அத்­துமீறிய நட­வ­டிக்கை அண்­மைய செயற்கைக்­கோள் புகைப்­ப­டத்­தின் மூலம் அம்­ப­ல­மாகி உள்­ளது என்­றும் இத­னால் இந்­தி­யா­வுக்­கும் புதிய அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ளது என்றும் பாது­காப்பு நிபு­ணர்­கள் கருது ­கின்றனர்.

தங்­க­ளுக்­குச் சொந்­த­மான நிலப்­ப­ரப்­பில் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் நாட்­டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்ட விவ­கா­ரம் என சீனா தெரி­வித்­துள்­ளது.

எல்லைப் பிரச்­சினை­கள் குறித்து வெளிப்­ப­டை­யாக பேசக்­கூ­டாது என்பது பூடா­னின் கொள்கையாகும்.