74 ஆண்டுகள் கழித்து சந்தித்த சகோதரர்கள்

74 ஆண்டுகள் கழித்து சந்தித்த சகோதரர்கள்

1 mins read
88a54de7-c14a-4493-812e-afe10735aa57
சகோதரர்கள் இருவரும் கண்ணீர்விட்டனர். படம்: ஊடகம் -

சண்­டி­கர்: இந்­தியா, பாகிஸ்­தான் பிரி­வி­னை­யின்­போது பிரிந்த இரு சகோ­த­ரர்­கள் 74 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு முதல் முறை­யாக சந்­தித்­த­னர்.

இரு­வ­ரில் அண்­ணன் முக­மது ஹபீப் இந்­தி­யா­வில் உள்ள பஞ்­சாப் மாநி­லத்­தி­லும் தம்பி முக­மது சித்­திக் பாகிஸ்­தா­னில் உள்ள ஃபைஸ்லா­பாத்­தி­லும் வசித்து வந்­த­னர்.

நாடு­கள் பிரிந்­த­தால் இரு­வ­ருக்­கும் இடை­யே­யான தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது. அதன் பிறகு, எவ்­வ­ளவோ முயற்சி செய்­தும் ஒன்­று­சேர முடி­ய­வில்லை. உற­வி­னர்­கள் சிலர் சமூக ஊட­கங்­கள் மூலம் சகோ­த­ரர்­களை சேர்த்­து­வைக்க மேற்­கொண்ட முயற்சி பல­ன­ளித்­துள்­ளது.

சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் அண்­மை­யில் பாகிஸ்­தான் எல்­லை­யில் உள்ள கட்­டாக் பூரில் உள்ள குருத்­வா­ரா­வில் சந்­தித்­த­னர்.

அப்­போது இரு­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் கட்­டி­ய­ணைத்து கண்­ணீர் மல்க பேசி­க் கொண்டனர். இது அங்கு இருந்­த­வர்­க­ளை­யும் கண்­கலங்க வைத்­தது.