மேகதாது அணைக்காக காங்கிரஸ் பாத யாத்திரை: தடை விதித்த கர்நாடக அரசு

மேகதாது அணைக்காக காங்கிரஸ் பாத யாத்திரை: தடை விதித்த கர்நாடக அரசு

1 mins read
ac2a7d69-bad2-4812-947c-f915a5cd2eb7
-

பெங்­க­ளூரு: கொரோனா தொற்று அதி­க­ரித்து வரும் நிலை­யில், காங்­கி­ரஸ் கட்சி மேற்­கொண்­டுள்ள பாத யாத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை அறி­வித்­துள்­ளார்.

மேக­தா­து­வில் அணை கட்­டு­வது உறுதி என்­றும் அது தொடர்­பான திட்­டத்தை மாநில அரசு செயல்­ப­டுத்­தும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

மேக­தாது அணை­யைக் கட்ட வலி­யு­றுத்தி, கர்­நா­டக காங்­கி­ரஸ் சார்­பில் கடந்த 10ஆம் தேதி 11 நாள் பாத யாத்­திரை தொடங்­கி­யது. இதற்கு மூத்த காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவ­கு­மார் தலைமை ஏற்­றார்.

இந்­நி­லை­யில், கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் நெருக்­கடி வேளை­யில், பாத யாத்­திரை செல்ல அனு­ம­தித்­தது ஏன் என்று அம்­மா­நில அர­சுக்கு உயர் நீதி­மன்­றம் கேள்வி விடுத்­தது. இதை­ய­டுத்தே, பாத யாத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­பட்டுள்­ளது.

இது தொடர்­பாக செய்­தியாளர்­களி­டம் பேசிய அம்­மாநில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, நிலம், நீர் தொடர்­பாக மாநி­லத்­திற்கு ஒரு பிரச்­சினை என்­றால் அனைத்­துக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செயல்­படு­வோம் என்­றார். மாநில நிலைமைக்காக இணைந்து போராடுவோம் என்றும் கூறினார்.