'நீங்கள் எங்களுக்கு மரியாதைக்குரியவர்'

'நீங்கள் எங்களுக்கு மரியாதைக்குரியவர்'

2 mins read
bf976a4b-e6d8-4361-9e78-6b0daf36d9c8
-

புது­டெல்லி: பிர­த­மர் மோடி அண்­மை­யில் பஞ்­சாப் சென்­ற­போது பாது­காப்­பில் குள­று­படி ஏற்­பட்­ட­தால் அவர் திரும்­பிச் சென்­றார். இது குறித்து விசா­ரணை நடை­பெற்று வரும் வேளை­யில் பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சிங் பிர­த­ம­ரி­டம் வருத்­தம் தெரி­வித்­துள்­ளார்.

நலத்­திட்­டங்­கள் தொடக்க விழா­வில் பங்­கேற்­ப­தற்­காக பிர­த­மர் பஞ்­சாப் மாநி­லத்­திற்கு சென்­ற­போது சாலையை மறித்து சிலர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இத­னால் அவ­ரது வாக­னம் விழா நடை­பெ­றும் இடத்தை அடைய முடி­யா­மல் பாலத்­தில் காத்­தி­ருக்­கும் நிலை ஏற்­பட்­டது.

பிர­த­ம­ரின் பாது­காப்­பில் குறை­பாடு ஏற்­பட்­டதை அடுத்து அவ­ரது பய­ணம் பாதி­யில் ரத்து செய்­யப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை நடத்த உச்­ச­ நீதி­மன்­றம் குழு அமைத்­துள்­ளது.

இந்த நிலை­யில் பிர­த­மர் மோடி­யின் பஞ்­சாப் பய­ணத்­தின்­போது பாது­காப்பு குள­று­படி ஏற்­பட்­டது தொடர்­பாக அவ­ரு­டன் காணொளி மூலம் உரை­யா­டிய பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சிங் சன்னி முறைப்­படி வருத்­தம் தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வடிக்கை குறித்து மாநில முதல்வர்­ க­ளு­டன் பிர­த­மர் மோடி காணொளி வாயி­லாக நேற்று முன்­தி­னம் ஆலோ­சனை நடத்­தி­னார்.

அப்­போது பிர­த­ம­ரு­டன் உரை­யா­டிய பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சிங் சன்னி, பஞ்­சாப் பய­ணத்­தின்­போது நடந்த சம்­ப­வத்­திற்கு வருந்து­ வ­தாகக் கூறி­னார்.

"நீங்­கள் எனக்­கும், எங்­கள் அனை­வ­ருக்­கும் மரி­யா­தைக்­கு­ரி­ய­வர்­கள். உங்­க­ளது பஞ்­சாப் பய­ணத்­தின்­போது என்ன நடந்­ததோ அதற்கு நான் வருந்­து­கி­றேன். பிர­த­மர் வாழ்­நாள் முழு­வ­தும் உற்­சா­கத்­து­டன் ஆரோக்­கி­ய­மான வாழ்வை வாழ வேண்­டும்," என இந்­தி­யில் கவிதை வரி­களை கூறி பிர­த­ம­ருக்கு சரண்­ஜித் சிங் சன்னி வாழ்த்துத் தெரி­வித்­தார்