சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் வைத்து பண்டிகை யைக் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துக் கூறிய அவர், "சித்திரை 1அன்றுதான் தமிழ் புத்தாண்டு, நான் அதைத்தான் எப்போதும் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன்," என்றார்.

