புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் புதிய உருமாறிய ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவிலும் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 553 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வேளையில் நேற்று காலை நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு (268,833) தொற்று உறுதி செய்யப்பட்டது.
6,000ஐ தாண்டிய ஓமிக்ரான் தொற்று
1 mins read
-

