புதுடெல்லி: புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் (startup companies) புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுடன் நேற்று காணொளி மூலம் அவர் கலந்துரையாடினார்.
அப்போது அனைத்துவிதமான புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கான கொள்கைகளில் அரசு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். "இனி ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி தேசிய புதி தாகத் தொழில் தொடங்கும் நிறுவ னங்களின் தினமாகக் கடை பிடிக்கப்படும். மக்களின் ஆற்றலை தேசம் அங்கீகரித்துள்ளது. இந்தியா 100ஆண்டு சுதந்திர தினத் தைக் கொண்டாடும் வேளையில் புதிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். நாட்டின் புதிய கண்டு பிடிப்பாளர்கள், அனைத்துலக அளவில் தேசத்தை மிளிர செய்கின்றனர். இந்த தசாப்தம் இந்தியாவின் தசாப்தமாக மாறியுள்ளது," என்றார் பிரதமர்.

