சீனாவுக்கு ரகசியங்கள்: முடக்கப்பட்ட சொத்துகள்

சீனாவுக்கு ரகசியங்கள்: முடக்கப்பட்ட சொத்துகள்

2 mins read
bcef5fc6-0f27-4026-b5b4-a86c4cd22762
ராஜீவ் சர்மா. படம்: ஊடகம் -

செய்தியாளர் ராஜீவ் சர்மாவுக்கு அமலாக்கத்துறை நெருக்கடி

புது­டெல்லி: தன்னிச்சையான செய்­தி­யா­ள­ரான ராஜீவ் சர்­மா­வின் சொத்­து­களை மத்­திய அம­லாக்­கத்­துறை முடக்கி உள்­ளது. நாட்­டின் பாது­காப்­பு­டன் தொடர்­பு­டைய ஆவ­ணங்­களை அவர் சீனா­வுக்கு விற்­ற­தாக குற்றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

சீன உளவு அமைப்­பி­டம் அவர் அந்த ஆவ­ணங்­களை ஒப்­ப­டைத்த­தா­க­வும் அவ­ரது கூட்­டா­ளி­கள் தேடப்­பட்டு வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த 2020ஆம் ஆண்­டில் டெல்லி காவல்­துறை ராஜீவ் சர்மாவைக் கைது செய்­தது. பாது­காப்பு சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­களை விற்­ற­தாக அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. எனி­னும் இந்த வழக்­கில் அவர் பிணை பெற்­றார்.

பின்­னர் வெளியே வந்த அவர் மீது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்­றத்­தில் ஈடு­பட்­ட­தாக அம­லாக்­கத்­துறை புகார் கூறி­யது. அதன் பேரில் அவர் மீண்­டும் கைதா­னார். எனி­னும் கடந்த வாரம் இந்த வழக்­கி­லும் டெல்லி உயர் நீதி­மன்­றம் அவ­ருக்கு பிணை வழங்­கி­யது.

இந்நிலையில், அவருக்குச் சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவை டெல்லி பீதம்புரா குடியிருப்புப் பகுதியில் உள்ளன. தனது கூட்­டா­ளி­கள் சில­ரு­டன் சேர்ந்து சீனா, நேப்­பாள நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளின் பெய­ரில் ராஜீவ் சர்மா போலி நிறு­வ­னங்­க­ளைத் தொடங்­கி­ய­தா­க­வும் அவற்­றின் மூலம் சீன உளவு அமைப்­பி­டம் பணம் பெற்­ற­தா­க­வும் அம­லாக்­கத்­துறை சாடி­யுள்­ளது.

இதே நிறு­வ­னங்­கள் மூலம்­தான் அவர் சீன உளவு அமைப்­புக்­குத் தேவை­யான இந்­தி­யா­வின் பாது­காப்­பு­டன் தொடர்­பு­டைய ஆவ­ணங்­களை அவர் விற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ராஜீவ் சர்மா ஊடகத் து­றையில் சுமார் நாற்­பது ஆண்­டு­கால அனு­ப­வம் கொண்­ட­வர். கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு அவர் தன்னிச்சையான செய்­தி­யா­ள­ராக மாறினார். பின்­னர் சீன அர­சுக்குச் சொந்­த­மான 'குளோ­பல் டைம்ஸ்' பத்­தி­ரி­கை­யில் எழுதி வந்த அவர், 2016ஆம் ஆண்டு அந்­நாட்டு உளவு அமைப்­பு­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக் கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

பின்­னர், ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் அவர் இந்­தி­யா­வின் பாது­காப்பு ரக­சி­யங்­களை சீனா­வுக்கு விற்று வந்­துள்­ளார் என்­பது அம­லாக்­கத்­து­றை­யின் குற்­றச்­சாட்­டா­கும்.