வலிப்பால் சரிந்த ஓட்டுநர்; பேருந்தை இயக்கி பயணிகளைக் காப்பாற்றிய பெண்மணி

வலிப்பால் சரிந்த ஓட்டுநர்; பேருந்தை இயக்கி பயணிகளைக் காப்பாற்றிய பெண்மணி

1 mins read
0655261e-c90e-4891-994b-9c58879745bc
ஓட்டுநர் இருக்கையில் ஆஷா. பின்னால் பயணிகள். படம்: ஊடகம் -

மும்பை: புனே நகரை அடுத்­துள்ள சிரூர் பகு­தி­யைச் சேர்ந்த ஆஷா வக்­மரே என்ற பெண்­மணி தனது பகு­தி­யைச் சேர்ந்த சில­ரு­டன் சிறிய ரகப் பேருந்­தில் சுற்­றுலா சென்­றி­ருந்­தார். 7ஆம் தேதி புறப்­பட்ட அந்­தக் குழு நேற்று முன்­தி­னம் ஊர் திரும்­பி­யது.

இந்­நி­லை­யில், பேருந்து ஓட்­டு­நருக்கு எதிர்­பா­ரா­த­வி­த­மாக வலிப்பு ஏற்­பட்­டது. அந்த ஆட­வர் தனது இருக்­கை­யி­லேயே சாய்ந்­து­விட்­டார்.

இதைக்­கண்டு பேருந்தில் இருந்த பெண்­கள் பயத்­தில் குரல் எழுப்ப, ஆபத்தை உணர்ந்த ஆஷா, சட்­டென இருக்­கை­யில் சாய்ந்­து­விட்ட ஓட்­டு­நரை அப்­பு­றப்­ப­டுத்­தி­னார். பின்­னர் ஓட்­டு­நர் இருக்­கை­யில் அமர்ந்து அவரே பேருந்தை இயக்­கி­னார்.

இத்­த­னைக்­கும் ஆஷா­வுக்கு கார் மட்­டுமே ஓட்­டத் தெரி­யும். எனி­னும் துணிச்­ச­லு­டன் செயல்­பட்டு, பேருந்தை தன் கட்­டுப்­பாட்டுக்­குள் கொண்டு வந்து சுமார் பத்து கிலோ மீட்­டர் தூரம் அதை ஓட்­டிச் சென்றார் ஆஷா.

பின்­னர் அந்த ஓட்­டு­ந­ருக்கு முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

பேருந்­தில் இருந்த மற்ற பெண்­களை­யும் குழந்­தை­க­ளை­யும் காப்­பாற்­றிய ஆஷா­வுக்குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன. அவர் பேருந்தை இயக்­கி­ய­போது மற்­றொரு பெண் அதை காணொ­ளி­யா­கப் பதிவு செய்து, இணை­யத்­தில் வெளியிட, அது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.