புதுடெல்லி: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (படம்) இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று முன்தினம் அமைச்சர் ஜெய்சங்கருடன் காணொளி வசதி மூலம் பேசினார். அப்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா கடனுதவி அளிக்க வேண்டும் என்று அந்நாடு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், அண்மைய பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கையின் உறுதியான, நம்பகமான கூட்டாளியாக இந்தியா இருக்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்களுக்காக ஒரு பில்லியன் டாலரும் எரிபொருள் வாங்குவதற்கு ஐநூறு மில்லியன் டாலரும் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கைக்கு உதவ, இந்தியா தனது அனைத்துலகக் கூட்டாளிகளையும் வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டது.

