கேரளாவில் ஒரே நாளில் 17,000 பேர் பாதிப்பு: மகாராஷ்டிராவில் புது உச்சம்

கேரளாவில் ஒரே நாளில் 17,000 பேர் பாதிப்பு: மகாராஷ்டிராவில் புது உச்சம்

2 mins read
d4799544-50d9-4a68-bc0b-0b0190dae414
-

திரு­வ­னந்­தபுரம்: நாடு முழு­வ­தும் நாள்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்கானோர் புதி­தாக தொற்­றுக்கு ஆளாகி வரும் நிலை­யில், கேரளா, மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­களில் அன்­றா­டம் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இதை­ய­டுத்து தொற்­றுப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் கேர­ளா­வில் ஒரே நாளில் புதி­தாக 17,755 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு நேற்று முன்­தி­னம் மேலும் 17 பேர் தொற்­றுப் பாதிப்­புக்கு பலி­யா­கி­விட்­ட­னர்.

அன்­றாட தொற்று எண்­ணிக்கை அதி­க­ரி்த்த வேளை­யில், சனிக்­கிழமை­யன்று மூவா­யி­ரம் பேர் மட்­டுமே குண­ம­டைந்­துள்­ள­தாக மாநில சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது. தற்­போது சுமார் 90 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் தொற்­றுப் பாதிப்­புக்­காக சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மகா­ராஷ்­டிர நில­வரம்

இதற்­கி­டையே, மகா­ராஷ்­டி­ரா­வி­லும் டெல்­லி­யி­லும் தொற்­றுப் பாதிப்பு உச்­சத்தை அடைந்­தி­ருக்­கக் கூடும் என நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 42,462 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. அவர்­களில் 125 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது.

சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி அம்­மா­நி­லத்­தில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 264,441ஆக கூடி­யுள்­ளது. ஒரே நாளில் மேலும் 23 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

மாநி­லத்­தில் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,730ஆக உள்­ளது.

கர்­நா­டகா நில­வ­ரம்

இதற்­கி­டையே கர்­நா­ட­கா­வில் அன்­றாட தொற்­றுப் பாதிப்பு எண்­ணிக்கை 25 ஆயி­ரத்­தைக் கடந்துள்­ளது. இதை­ய­டுத்து தீவிர அறி­கு­றி­கள் உள்­ள­வர்­கள் மட்டுமே சிகிச்சைக்காக மருத்­து­வ­மனைகளை அணுக வேண்­டும் என அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

அடுத்த இரு வாரங்­க­ளுக்கு இந்த உத்­த­ரவு அம­லில் இருக்­கும் என்று அம்­மா­நில சுகா­தார, குடும்ப நலத்­துறை முதன்­மைச் செய­லா­ளர் அனில்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் நேற்று முன்­தி­னம் மட்­டும் 32,793 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. பெங்­களூ­ரில் மட்­டும் 22 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சனிக்­கி­ழ­மை­யன்று மேலும் ஏழு பேர் பலி­யா­கி­விட்­டனர். மொத்த மரண எண்­ணிக்கை 38,418ஆக அதி­க­ரித்­துள்­ளது.