'யாரையும் கட்டாயப்படுத்த முடியாது'

'யாரையும் கட்டாயப்படுத்த முடியாது'

2 mins read
f05b70a5-d1b7-4107-be2a-8fff7c77203b
இந்தியாவின் மும்பை நகரில் இம்மாதம் 3ஆம் தேதி தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிப்பட்டவரின் விருப்பம் என்கிறது இந்திய அரசு

புது­டெல்லி: தடுப்­பூசி போட்­டுக் கொள்ள வேண்­டும் என்று யாரை­யும் கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது என்று நீதி­மன்ற வழக்கு ஒன்­றில் இந்­திய அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.

"மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்­பூசி போட வேண்­டும், தடுப்­பூசி செலுத்­தி­ய­தற்­கான சான்­றி­தழை பொது இடங்­களில் காண்­பிக்­கும் நடை­மு­றை­யில் இருந்து விலக்கு அளிக்க வேண்­டும்," என்று தொண்டு நிறு­வ­னம் ஒன்று உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­தது. இந்த வழக்­கில் மத்­திய அரசு சார்­பில் பிர­மாணப் பத்­தி­ரம் தாக்­கல் செய்யப்பட்டது.

அதில் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள யாரை­யும் கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரிவித்தது.

இது, அமைச்சு மற்­றும் மத்­திய அரசு வெளி­யிட்­டுள்ள வழி­காட்டு நெறி­மு­றை­யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெருந்­தொற்றை கருத்­தில் கொண்டே பொது­மக்­கள் நலன் கருதி தடுப்­பூசி போடும் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

மக்­கள் தடுப்­பூசி போட வேண்­டும் என பத்­தி­ரிகை, சமூக வலைத்­த­ளம் மற்­றும் தொலைக்­காட்சி உள்­ளிட்ட பல்­வேறு வழி ­மு­றை­கள் வழி நாட்டு மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

ஆனால், தனிப்­பட்ட நப­ரின் விருப்­பத்­திற்கு மாறாக யாரை­யும் தடுப்­பூசி போட்­டுக்கொள்ள கட்டா­யப்ப­டுத்த முடி­யாது.

எந்தவித நட­வ­டிக்­கைக்­கும் தடுப்­பூசி சான்­றி­தழை வைத்­தி­ருக்க வேண்­டும் என்று எந்த விதி­மு­றை­க­ளை­யும் மத்­திய அரசு விதிக்­க­வில்லை என்று அந்த பிர­மாணப் பத்­தி­ரத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் தின­சரி தொற்று சற்­றுத் தணிந்­துள்­ளது. ஞாயிற்­றுக் கிழமை 2.71 லட்­சம் பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் நேற்று காலை முந்தைய 24 மணி நேரத்­தில் 2.58 லட்­சம் பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். மொத்­தம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 3,73,80,253 ஆனது. நேற்று காலை முந்­தைய 24 மணி நேரத்­தில், 1,51,740 பேர் குணம் ­அடைந்­துள்­ள­னர்.

தொற்று கார­ண­மாக மேலும் 385 பேர் மர­ண­ம­டைந்­த­தால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 4,86,451க்கு அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே 15 முதல் 18 வயதுக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு விரை­வில் இரண்­டா­வது தடுப்­பூசி போடப்­படும் என்­றும் 12 முதல் 14 வய­துக்­குட்­பட்ட சிறார்­க­ளுக்கு பிப்­ர­வரி இறுதி அல்­லது மார்ச் தொடக்­கத்­தில் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கப்­படும் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது. இந்தியா, ஞாயிறு வரை கடந்த ஓராண்டில் 157 கோடிக்கும் மேல் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது.