உத்தரகாண்டில் பாஜக அமைச்சர் நீக்கம்

உத்தரகாண்டில் பாஜக அமைச்சர் நீக்கம்

2 mins read
8bc6ef09-c145-4fc1-be5c-cd4cefe1fd37
-

டேரா­டூன்: உத்­த­ர­காண்ட் மாநி­லத் தில் தேர்­தல் நடை­பெ­றும் வேளை யில் அம்­மா­நி­லத்­தில் ஆட்சி நடத்­தும் பாஜக அமைச்­ச­ர­வையில் இருந்து அக்­கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர் ஒரு­வர் நீக்­கப்­பட்­டுள்­ளார்.

பாஜ­க­வின் இந்த திடீர் முடிவு அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எழு­பது தொகுதிகளைக் கொண்ட உத்­த­ர­காண்ட் சட்­ட­ சபைக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி ஒரே கட்­ட­மாக தேர்­தல் நடை­பெ­று­கிறது. வாக்­கு­கள் மார்ச் 10ஆம் தேதி எண்­ணப்­பட்டு முடி­வு­கள் அன்றே அறி­விக்­கப்­பட உள்­ளன. இம்­மா­நி­லத்­தில் பாஜக, காங் கிரஸ் உள்­ளிட்ட பிர­தா­னக் கட்­சி­கள் போட்­டி­யி­டு­கின்­றன.

ஆட்­சியைத் தக்­க­வைத்­துக் கொள்ள பாஜ­க­வும் ஆட்­சி­யை கைப்­பற்ற காங்­கி­ர­சும் தீவிர முயற்சி ­களை எடுத்து வரு­கின்­றன.

திரி­ணா­முல் காங்­கி­ரஸ் மற்­றும் ஆம் ஆத்மி உள்­ளிட்ட கட்­சி­களும் உத்­த­ர­காண்ட் சட்­ட­சபை தேர்­த­லில் கள­மி­றங்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன. பாஜக ஆட்­சி­யில் புஷ்­கர் சிங் தமி முதல்­வ­ராக இருந்து வரு­கி­றார். அவ­ரது அமைச் சர­வை­யில் ஹரக் சிங் ராவத் அமைச்­ச­ராக இருந்தார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யி­லி­ருந்து வில­கிய ஹரக் சிங் 2016ஆம் ஆண்­டில் பாஜ­க­வில் இணைந்ததால் அவ­ருக்கு அமைச்­சர் பொறுப்பு வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் ஹரக் சிங் ராவத் கட்­சிக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக பாஜக வட்­டா­ரத்­தில் தக­வல்­ பர­வியது.

இதை­ய­டுத்து அமைச்­சர், கட்சி யின் அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து ஹரக் சிங் ராவத் நீக்­கப்­பட்­டுள்­ளார். இத­னால் அவர் மீண்­டும் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணை­வார் என எதிர்பார்க்­கப்­ படுகிறது. தேர்­தல் சம­யத்­தில் பாஜக அமைச்­சர் நீக்­கப்­பட்­டது அம்­மா­நில அர­சி­யல் புதிய சல­ச­லப்பை ஏற் படுத்­தி­யுள்­ளது.