அமராவதி: திருமணம் ஆகவுள்ள தம்முடைய பேத்திக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் 365 வகையான உணவு வகைகளை சமைத்து, அப்பெண்ணின் தாத்தா பாட்டி திக்குமுக்காட வைத்த நிகழ்வு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், கோதாவரியில் நடந்துள்ளது.
நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவிக்கும் சாய் கிருஷ்ணா என்பவருக்கும் திரு மணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் விரைவில் திரு மணம் நடைபெறவுள்ள வேளையில் தம்முடைய பேத்திக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் சங்க ராந்தியை முன்னிட்டு பெண் வீட்டார் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, விதவிதமான காய் கறிகள், பழங்கள், இனிப்பு வகை களைத் தயார் செய்யும் பெரும் பணி இடம்பெற்றது. முப்பது வகை யான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள் மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டன.
மேலும், 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பெண் வீட்டார் அசத்தி உள்ளனர். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே இந்தத் தடபுடல் விருந்தைக் கண்டு உள்ள குந்தவி-சாய் கிருஷ்ணா தம்பதி அசந்துபோய்விட்டனர்.
இது குறித்து பேசிய பெண் வீட்டார், "வருங்கால மருமகன்மீது எங்களது அன்பைக் காட்ட, ஓர் ஆண்டில் 365 நாள்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்தோம்," என்று தெரிவித்தனர்.
இந்தத் தடபுடலான விருந்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

