இந்தியாவில் அன்றாடத் தொற்று 3 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் அன்றாடத் தொற்று 3 லட்சத்தை நெருங்கியது

2 mins read
4f25aa06-6986-4a55-8f47-8c1f9351069d
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அன்றாடத் தொற்று இருபதாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டிப்பதாக பெங்களூரு காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன் அங்கு தொற்றுப் பரிசோதனைகளையும் தடுப்பூசி போடுவதையும் அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

முதல் மூன்று இடங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­ப­டுவோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கிறது. நேற்­றைய நில­வ­ரப்­படி புதி­தாக 2,82,970 பேரை கொரோனா தொற்­றி­யுள்­ளது. இது அந்­நாட்டு சுகா­தா­ரத்­து­றை­யின் தர­வு­கள் வழி தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 2,71,202 ஆக இருந்த தொற்று எண்­ணிக்கை, திங்­கள்கிழமை 2,58,089 ஆகக் குறைந்­தது. செவ்­வாய்க்­கி­ழ­மை­யும் இறங்­கு­மு­க­மாக 2,38,018க்குச் சென்­றது. ஆனால், நேற்று அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது. கொரோனா பாதிப்­புக்கு கடந்த 24 மணி நேரத்­தில் 441 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

புதிய வகை ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 8,961 ஆக பதி­வா­கி­யுள்­ளது. இவ்­வ­கைக் கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் விகி­தம் 0.79 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் தற்­போது 18,31,000 பேர் கொவிட்-19 பாதிப்­புக்­குச் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் புதி­தாக 1,88,157 பேர் தொற்றுப் பாதிப்­பில் இருந்து மீண்டு வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

கொரோனா பாதிப்­பிற்­காக சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 230 நாள்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் உச்­சத்தை எட்­டி­யுள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத் துறை அறி­வித்­துள்­ளது.

தொற்று நோய் பர­வு­வதை திறம்பட கண்­கா­ணித்து பரி­சோ­த­னையை அதி­க­ரிக்க வேண்­டும் என்று மாநில அர­சு­களை மத்­திய சுகா­தா­ரத்­துறை கேட்­டுக்கொண்­டுள்­ளது.

மகா­ராஷ்­டிரா, கேரளா, கர்­நா­டகா, தமிழ்­நாடு, ஆந்­திரா ஆகிய ஐந்து மாநி­லங்­களே ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­க­ளா­கக் கூறப்­ப­டு­கின்­றன.

இந்­தி­யா­வில் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் மகா­ராஷ்­டிரா முதல் இடத்­தி­லும் கேரளா, கர்­நா­டகா, தமிழ்­நாடு ஆகிய மாநி­லங்­கள் அடுத்­த­டுத்த நிலை­யிலும் உள்­ளன.

நேற்­றைய நில­வ­ரப்­படி கர்­நா­ட­கா­வில் 41,457 பேருக்­கும், மகா­ராஷ்­டி­ரா­வில் 39,207 பேருக்­கும் கேர­ளா­வில் 28,481 பேருக்­கும் தமிழ்­நாட்­டில் 23,888 பேருக்­கும் கிருமி தொற்­றி­யுள்­ளது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆந்­தி­ரா­வில் அன்­றா­டத் தொற்று 6,996 ஆக உள்­ளது.

கொரோனா தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­கள் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு, தடுப்­பூசி, பரி­சோ­த­னைப் பணி­க­ளை­யும் முடுக்கிவிட்­டுள்­ளன. கடந்த 24 மணி­நே­ரத்­தில் புதி­தாக 1,88,157 பேர் சிகிச்சை பெற்று குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

இது­வரை குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 3.55 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது என்று சுகா­தா­ரத் துறை அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.