செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f5691e8a-06ca-4289-baa3-20c9e2a3a488
-

மகா­ராஷ்­டி­ரா­வில் காவல்­து­றை­யைச் சேர்ந்த 499 பேருக்கு தொற்று

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 499 காவல்­து­றை­யி­ன­ருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறு­தி­யா­கி­யுள்­ளது. இவர்­க­ளு­டன் சேர்த்து மொத்­தம் 4,090 காவல்­து­றை­யி­னரை கொரோனா தொற்­றி­யுள்­ளது. இவர்­கள் அனை­வ­ரும் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இம்­மா­நி­லத்­தில் இது­வரை காவல்­து­றை­யில் 40,959 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 46 அதி­கா­ரி­களும் 459 காவ­லர்­களும் உயி­ரி­ழந்துவிட்­ட­னர்.

பஞ்­சாப் முதல்­வ­ரின் உற­வி­னர்

வீட்­டில் அதி­ர­டிச் சோதனை

சண்­டி­கர்: பஞ்­சாப் முதல் அமைச்­சர் சரண்­ஜித் சிங் சன்­னி­யின் உற­வி­னர் வீட்­டில் அம­லாக்­கத்­து­றை­யி­னர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதி­ரடிச் சோதனை மேற்­கொண்­ட­னர். முதல் அமைச்­ச­ரின் உற­வி­ன­ரான புபீந்­தர் சிங் ஹனி மற்­றும் அவ­ரது கூட்­டாளி சந்­தீப் குமார் ஆகி­யோ­ரின் வீட்­டில் இந்த சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. சட்­ட­வி­ரோத மணல் கடத்­தல் தொடர்­பாக இந்த சோதனை நடை­பெற்­றது. பல மணி நேரம் நடை­பெற்ற இந்த சோத­னை­யில் 6 கோடி ரூபாய் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. புபீந்­தர் சிங் ஹனி வீட்­டில் இருந்து 4 கோடி ரூபா­யும் அவ­ரது கூட்­டாளி சந்­தீப் குமா­ரின் வீட்­டில் இருந்து 2 கோடி ரூபா­யும் கைப்­பற்­றப்­பட்­டது. பஞ்­சாப்­பில் பிப்­ர­வரி 20ஆம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லை­யில் அம­லாக்­கத் துறை­யின் இந்த நட­வ­டிக்கை பர­ப­ரப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆம் ஆத்மி: கோவா முதல்­வர்

வேட்­பா­ள­ராக வழக்கறிஞர் அமித் பலே­கர்

பனாஜி: கோவா சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் ஆம் ஆத்­மி­யின் முதல்­வர் வேட்­பா­ள­ராக வழக்­க­றி­ஞர் அமித் பலே­கரை அக்­கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் டெல்லி முதல்­வ­ரு­மான அர­விந்த் கெஜ்­ரி­வால் அறி­வித்­தார். உத்­த­ரப் பிர­தே­சம், பஞ்­சாப், உத்­த­ர­கண்ட் உள்­ளிட்ட ஐந்து மாநி­லங்­க­ளுக்கு பிப்­ர­வரி 10ஆம் தேதி முதல் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளன. இதில், கோவா சட்­டப்­பே­ர­வைக்­கான வாக்­குப் பதிவு ஒரே கட்­ட­மாக பிப்­ர­வரி 14ஆம் தேதி நடை­பெ­று­கிறது. கோவா சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் 40 தொகு­தி­க­ளி­லும் ஆம் ஆத்மி தனித்துப் போட்­டி­யி­ட­வுள்­ளது.

மாவோ­யிஸ்ட்­டுகள் சுட்­டுக்­கொலை

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா எல்­லைக்­குட்­பட்ட காட்­டுப் பகு­தி­யில் நேற்று அதி­கா­லை­யில் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் மாவோ­யிஸ்ட்­டுக்கு இடையே நடந்த துப்­பாக்­கிச் சண்­டை­யில் ஒரு பெண் உள்பட நான்கு மாவோ­யிஸ்ட்­டுகள் கொல்­லப்­பட்­ட­னர். இந்த மோத­லில் ஹைத­ரா­பாத்தைச் சேர்ந்த ஆயு­தப்­படை காவ­லர் ஒரு­வர் படு­கா­யம் அடைந்­தார்.

கடற்­படை கப்­ப­லில் வெடி­வி­பத்து: மூன்று அதி­கா­ரி­கள் உயி­ரி­ழப்பு

மும்பை: கடற்­ப­டைக் கப்­ப­லில் ஏற்­பட்ட வெடி­வி­பத்­தில் சிக்கி 3 இந்­திய கடற்­படை அதி­கா­ரி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

மும்பை கடற்­ப­டைத் தளத்­தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த போர்க்­கப்­பல் ஒன்­றில் செவ்­வாய்க்­கி­ழமை திடீ­ரென வெடி­வி­பத்து ஏற்­பட்­டது. இந்­தச் சம்­ப­வத்­தில் மூன்று கடற்­படை அதி­கா­ரி­கள் உயி­ரி­ழந்­த­னர். இதை மத்­திய பாது­காப்­புத்­துறை தெரி­வித்­துள்­ளது. வெடி­வி­பத்து ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து கப்­பல் ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக செயல்­பட்டு நிலை­மை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர் என்­றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விபத்­துக்கான கார­ணம் குறித்து அறி­வ­தற்கு விசா­ரணை முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போலி தங்க நாண­யங்­கள்;

மோசடி செய்த 2 பேர் கைது

மும்பை: கர்­நா­டக மாநி­லத்­தின் சாம்­ராஜ்­ந­கர் மாவட்­டத்­தின் சிகா­ரிப்­பு­ராவைச் சேர்ந்த இரண்டு பேர், குறைந்த விலை­யில் தங்க நாண­யங்­கள் விற்­ப­தா­கக் கூறி, ஒரு­வ­ரி­டம் ரூ.5 லட்­சம் பெற்­றுக் கொண்டு அரை கிலோ தங்­கக் கட்­டி­க­ளைக் கொடுத்­தனர். அந்­தத் தங்­கத்­தைச் சோதித்­துப் பார்த்­த­தில் அது போலி தங்­கம் என்­பது தெரி­ய­வந்­தது. இது­தொ­டர்­பாக

ஆன­வெட்­டியை சேர்ந்த ராமப்பா (வயது 44), சிகா­ரிப்­பு­ராவைச் சேர்ந்த திம்­மப்பா (65) ஆகி­யோரை காவல்­துறை கைது செய்­தது. இவர்­கள் இருவரும், பல­ரி­டம் மோசடி செய்­த­தும் தெரி­ய­வந்­துள்­ளது.