கொரோனா அச்சத்தால் குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவில்லை

கொரோனா அச்சத்தால் குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவில்லை

2 mins read
9fec5890-3a0e-4b55-8c51-d33fd3b11133
குடியரசு தின விழாவையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என்பதால் இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவம் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரின் வர்த்தக வட்டாரத்தில் ராணுவத் துணைப்படையினரும் போலிசாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த சில நாட்­க­ளாக கொவிட்-19 அன்­றா­டப் பாதிப்பு அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. அத­னை­ய­டுத்து அந்­நாடு கொண்­டா­ட­வி­ருக்­கும் குடி­ய­ரசு தின விழா­வில் வெளி­நாட்­டுத் தலை­வர்­கள் பங்­கேற்­க­வில்லை என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வின் குடி­ய­ரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. தலை­ந­கர் டெல்­லி­யில் நடை­பெ­ற­வி­ருக்­கும் அந்­தக் கொண்­டாட்ட விழா­வில் வெளி­நாட்டுத் தலை­வர்­கள் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்­பது வழக்­கம்.

்மத்­திய ஆசிய நாடு­க­ளான உஸ்­பெ­கிஸ்­தான், துர்க்­மெ­னிஸ்­தான், கஜ­கஸ்­தான், கிர்­கிஸ்­தான், தஜி­கிஸ்­தான் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த தலை­வர்­கள் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக பங்­கேற்­பார்­கள் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அன்­றா­டத் தொற்­றுப் பாதிப்பு எண்­ணிக்கை மூன்று லட்­சத்தை நெருங்­கி­யுள்­ளது. அதன் கார­ண­மா­கவே இந்த குடி­ய­ரசு தின விழா­வில் வெளி­நாட்­டுத் தலை­வர்­கள் பங்­கேற்க மாட்­டார்­கள் என்று இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. இந்­நி­லை­யில் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக குடி­ய­ரசு தின விழா நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும் டெல்­லி­யில் பலூன்­கள், பாரா கிளை­டர்­கள், சிறு விமா­னங்­கள் உள்­ளிட்­டவை பறப்­ப­தற்கு மத்­திய அரசு தடை விதித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் நடை­பெ­றும் குடி­ய­ரசு தின விழாவை வழக்­க­மாக ஏறக்­கு­றைய 125,000 பேர் பார்­வை­யி­டு­வர். ஆனால், இப்­போது தொற்று அச்­சத்­தின் கார­ண­மாக 24,000 ஆகக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 19,000 பேர் மத்­திய அர­சின் சிறப்பு அழைப்­பி­த­ழைப் பெறு­வர் என்று கூறப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு 25,000 பேர் இந்த விழா­வில் கலந்­து­கொண்­ட­னர்.

குறிப்­பாக சுகா­தார, முன்­களப் பணி­யா­ளர்­கள், துப்­பு­ரவுத் தொழி­லா­ளர்­கள், கட்­டு­மானத் தொழி­லா­ளர்­கள், ஆட்டோ ஓட்­டு­நர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட உள்­ளது.