மோடியால் ஈர்க்கப்பட்டேன் - பாஜகவில் சேர்ந்த முலாயம் சிங் மருமகள் அபர்ணா

மோடியால் ஈர்க்கப்பட்டேன் - பாஜகவில் சேர்ந்த முலாயம் சிங் மருமகள் அபர்ணா

2 mins read
92953d69-e3bb-42f7-a0fb-c61503526d08
-

லக்னோ: பாஜ­க­வி­லி­ருந்து பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்தைச் சேர்ந்த பல தலை­வர்­கள் சமாஜ்­வாடி கட்­சி­யில் இணைந்த நிலை­யில், முலா­யம் சிங்­கின் மரு­ம­கள் ஆளும் கட்­சி­யில் இணைந்­தி­ருப்­பது அர­சி­யல் வட்­டா­ரத்­தில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அகி­லேஷ் யாத­வின் தம்பி மனைவி அபர்ணா பாஜ­க­வில் நேற்று இணைந்­தார்.

டெல்­லி­யில் உள்ள பாஜக தலை­மை­ய­கத்­துக்கு வருகை தந்த அபர்ணா யாதவ் உ.பி. துணை முதல்­வர் முன்­னி­லை­யில் பாஜ­க­வில் தன்னை இணைத்­துக் கொண்­டார். (படம்)

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சட்­டப்­பே­ரவை தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், சமாஜ்­வாடி கட்­சிக்கு இது பெரிய பின்­ன­டை­வாகப் பார்க்­கப்­ப­டு­கிறது.

உத்­த­ரப் பிர­தே­சத்­தின் முன்­னாள் முதல்­வர் முலா­யம் சிங் யாத­வின் இளைய மகன் பிர­திக் யாத­வின் மகள்­தான் அபர்ணா.

பாஜ­க­வி­லி­ருந்து தலை­வர்­கள் பலர் சமாஜ்­வாடி கட்­சி­யில் இணைந்த நிலை­யில், முலா­யம் சிங்­கின் மரு­ம­கள் அபர்ணா பாஜகவில் சேர்ந்துள்ளது அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

சமாஜ்­வாடி கட்­சி­யி­லி­ருந்து விலகி அபர்ணா பாஜ­க­வில் இணை­வார் என பல நாள்­க­ளா­கவே அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பேசப்­பட்­டு­வந்­தது.

முன்­ன­தாக, ஆளும் பாஜ­க­வின் முக்­கிய அமைச்­சர்­க­ளான சுவாமி பிர­சாத் மவு­ரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செள­கான் ஆகி­யோர் சமாஜ்­வாடி கட்­சி­யில் அண்­மை­யில் இணைந்­த­னர். அதே­போல், அமைச்­சர்­க­ளைத் தொடர்ந்து வினய் சக்­கியா, ரோஷன் லால் வர்மா, முகேஷ் வர்மா, பக­வதி சாகர் ஆகிய பாஜக எம்­எல்­ஏக்­களும் சமாஜ்­வாடி கட்­சி­யில் சேர்ந்­த­னர்.

உத்­த­ரப் பிர­தேச சட்­ட­மன்ற தேர்­தல் இந்­தி­யாவே உற்று நோக்­கும் தேர்­தல் கள­மாக மாறி­யி­ருக்­கிறது.

இத்­தேர்­த­லில் மீண்­டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்­கும் முனைப்­போடு பாஜக செயல்­பட்டு வரு­கிறது. அதே நேரத்­தில் பாஜ­க­வுக்கு கடு­மை­யான சவாலாக அகி­லேஷ் யாத­வின் சமாஜ்­வாடி கட்சி இருக்கிறது.