புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், அப்பர் சியாங் மாவட்டத்தில் லுங்டா ஜோர் பகுதியைச் சேர்ந்த மிராம் தாரன், 17, ஜானி, 16, என்ற இரண்டு சிறுவர்களும் சாங்போ என்ற ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது சீன ராணுவம் அவர்களைக் கடத்திச்சென்றுவிட்டதாகவும் அவர்களில் ஜானி தப்பி ஓடிவந்ததால் அந்தக் கடத்தல் பற்றி தெரிய வந்ததாகவும் அருணாச்சலப் பிரதேச நாடாளுமன்ற உறுப் பினர் தபிர் காவோ தெரிவித்தார்.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் விரைவாகச் செயல்பட்டு சிறுவனை மீட்க வேண்டும்" என அவர் கோரினார்.
இந்நிலையில், இது பற்றி கருத்துக் கூறிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என்று சாடினார்.
கடந்த 2020ல் இந்தியச் சிறுவர்கள் ஆறு பேரை சீனா கடத்திச் சென்று பிறகு இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுவித்தது.
இதனிடையே, கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் சீனா பாலம் கட்டி வருவதாகக் கூறப்படுவது பற்றி டுவிட்டரில் கருத்து கூறிய ராகுல், "நம்நாட்டில் சட்ட விரோதமாக சீனா பாலம் கட்டுகிறது. பிரதமர் மவுனம் காப்பதால் சீன ராணுவத்தின் துணிச்சல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது," எனத் தெரிவித்தார்.