புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை அச்சம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் அளித்த விளக்கத்தை அடுத்து அமெரிக்காவுக்கான விமானப் போக்குவரத்தை ஏர் இந்தியா விமானம் நேற்று தொடங்கியது.
அதன்படி போயிங் விமானம் நேற்றுக் காலை அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவிருந்தது.
அமெரிக்காவில் அதிவேக திறன்கொண்ட 5ஜி கைபேசி தொழில்நுட்பத்தைத் தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.
இதனால் கைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் ஏர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி இருந்தன.