புதுடெல்லி: புதுடெல்லி ராஜபாதையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் அறிவித்தார்.
"கிரானைட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை அந்த இடத்தில் நேதாஜியின் உருவம் மின் ஒளியில் திரையிடப்படும். அந்த மின் ஒளி வடிவிலான சிலையை நான் நேதாஜியின் 125-வது பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதி (நாளை) திறந்துவைக்க உள்ளேன்," என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.