லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
சட்டமன்றத் தேர்தலையொட்டி நேற்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் கட்சி இளையர் பிரிவின் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டனர்.
அப்போது, காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு யார் களமிறங்குவார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சியில் என்னை தவிர வேறு எந்த முகத்தையாவது நீங்கள் பார்க்க முடிகிறதா? என் முகம் தெரிகிறது அல்லவா?," என்று செய்தியாளர்களை நோக்கி பிரியங்கா கேட்டார்.
இதை வைத்துப் பார்க்கையில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கக் கூடும் என்று அனுமானிக்க இடம் இருக்கிறது.