புதுடெல்லி: ரயில் பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இனி ரயிலில் மற்ற பயணிகளுக்குத் தொல்லை ஏற்படுத்தும் வகையில் சத்தமாகப் பாட்டு கேட்பது, கைபேசியில் பேசுவது ஆகிய செயல்பாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏராளமானோர் அளித்த புகார்களின் அடிப்படையில், இந்த புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பிட்ட ஒருவரால் தங்களுக்குத் தொல்லை ஏற்படுவதாக மற்ற பயணிகள் புகார் அளித்தால் ரயில்வே காவல்துறையினரும் பயணச்சீட்டு பரிசோதகரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இரவு பத்து மணிக்கு மேல் விளக்குகள் எரியக்கூடாது என்பதும் புதிய விதிமுறைகளில் ஒன்றாகும்.