ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: கர்நாடகா எதிர்ப்பு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: கர்நாடகா எதிர்ப்பு

1 mins read
c8adb865-5470-477a-a823-3a46147a2c4e
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக, தமி­ழக எல்­லைப் பகு­தி­யில் தமி­ழ­கம் தன்­னிச்­சை­யாக எத்­த­கைய பணி­க­ளை­யும் மேற்­கொள்ள முடி­யாது என கர்­நா­டக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் கோவிந்த் கார்­ஜோல் தெரி­வித்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஒகே­னக்­கல் கூட்டு குடி­நீர்த் திட்­டத்­துக்கு கர்­நா­டகா எதிர்ப்பு தெரி­விக்­கும் என்­றார்.

தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அண்­மை­யில் ரூ.4,600 கோடி மதிப்­பில் ஒகே­னக்­கல்­ கூட்டு குடி­நீர் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டம் நிறை­வேற்­றப்­படும் என அறி­வித்­தார்.

இதைச் சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர் கோவிந்த் கார்­ஜோல், இந்­தத் திட்­டம் குறித்து தமி­ழக அரசு இது­வரை உச்ச நீதி­மன்­றத்­தி­லும் காவிரி மேலாண்மை ஆணை­யத்­தி­லும் எந்த விவ­ர­மும் தெரி­விக்­க­வில்லை என்­றார்.

"ஒகே­னக்­கல் பகு­தி­யா­னது கர்­நா­டக, தமி­ழக எல்­லை­யில் அமைந்­துள்­ளது. அங்கு தமி­ழக அரசு மட்­டும் தன்­னிச்­சை­யாக இத்­த­கைய பணி­களை மேற்­கொள்ள முடி­யாது.

"காவிரி நடு­வர் மன்­றத் தீர்ப்பு, உச்ச நீதி­மன்ற இறு­தித் தீர்ப்­பின்­படியே தமி­ழக அரசு செயல்­பட வேண்­டும்.

"உச்­ச ­நீ­தி­மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­பில் குறிப்­பிட்­டுள்ள அளவு நீரையே கர்­நா­டகா தமி­ழ­கத்­துக்கு திறந்­து­வி­டும். இந்த திட்­டத்­துக்­காக கூடு­தல் நீர் திறந்­து­வி­டப்­படாது.

"காவிரி மேலாண்மை ஆணை­யம், கர்­நா­ட­கா­வின் அனு­ம­தியைப் பெறா­மல் தமி­ழக அரசு ஒருதலைப்­பட்­ச­மாக அறி­வித்­துள்ள இந்த திட்­டத்தை கர்­நா­டக அரசு எதிர்க்­கும்," என்­றார் கோவிந்த் கார்­ஜோல்.