காந்திக்குப் பிடித்த பாடல் நீக்கம்

காந்திக்குப் பிடித்த பாடல் நீக்கம்

2 mins read
3219bd8f-b395-42d9-bcbc-b3fe1905bdb7
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் குடி­ய­ரசு தின விழா ஆண்­டு­தோ­றும் ஜன­வரி 26ஆம் தேதி நாடு முழு­வ­தும் கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது. இந்­தக் கொண்­டாட்­டம் புது­டெல்­லி­யில் பல்­வேறு நிகழ்ச்­சி­ க­ளு­டன் நான்கு நாட்­க­ளுக்கு நீடிக்­கும். நாடு முழு­வ­தி­லும் இருந்து பாது­காப்­புப் படை­கள் டெல்­லிக்கு வருவது வழக்கம்.

பின்­னர் ஜன­வரி 29ஆம் தேதி குடி­ய­ரசு தின கொண்­டாட்­டங்­களின் நிறை­வு நாளில் முப்­ப­டை­ க­ளின் தலை­வ­ரான இந்­திய அதி­பர் டெல்லிக்கு வந்த பாது­காப்பு படை­களை மீண்­டும் தங்­கள் முகாம் ­க­ளுக்கு முறைப்­படி திருப்­பி­ய­னுப்பி வைப்பாா். பாது­காப்­புப் படை­கள் பாச­றைக்­குத் திரும்­பும் நிகழ்ச்­சி­யாக இது நடை­பெற்று வருகிறது.

இந்த நிகழ்வின்போது இந்­தி­யா­வின் தந்தை என்று போற்­றப்­படும் மகாத்மா காந்­திக்­குப் பிடித்­த­மான 'என்­னு­டன் இருங்­கள்' என்ற பாடல் வழக்­க­மாக இசைக்­கப்­படும். பிரிட்­டிஷ் கவி­ஞர் ஹென்றி பிரான்­சிஸ் லைட் என்­ப­வர் 1847ல் இந்த கிறிஸ்­துவ பாடலை இயற்­றி­யி­ருந்­தார். 1950ஆம் ஆண்டு முதலே குடி­யரசு தின நிகழ்ச்­சி­யில் இந்­தப் பாடல் இடம்­பெற்று வரு­கிறது.

இந்த நிலை­யில் இவ்­வாண்டு பாச­றைக்கு திரும்­பும் நிகழ்­வில் அந்­தப் பாடல் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

அதற்­குப் பதில் கவிஞா் முகமது இக்­பால் எழு­திய 'சாரே ஜஹான் சே அச்சா' (ஒட்­டு­மொத்த உல­கில் இந்­தியா மேலா­னது) என்ற பாடல் இசைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இந்­திய ராணு­வம் தரப்­பில் தெரி­விக்கப் ­பட்­டுள்­ளது.

இதற்கிடையே இந்திய விடு தலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில் இந்திய தேசத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக் கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக 'இந்தியா கேட்' பகுதியில் கிரானைட் கற்களால் செய்யப்பட்ட நேதாஜியின் பிரம் மாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் தமது டுவிட்டர் பதிவில் நேதாஜியின் லட்சியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்க மளிக்கும் என்று தெரிவித்தார். "இந்திய ராணுவத்தை உருவாக்கிய பெருமை நேதாஜியைச் சேரும். 'வங்கத்துச் சிங்கம்' என்று இன்றும் அவர் மக்களால் போற்றப்படுபவர்," என்றும் அவர் கூறியிருந்தார்.