டெல்லியில் பாதுகாப்புடன் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் தொடங்கியது

டெல்லியில் பாதுகாப்புடன் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் தொடங்கியது

2 mins read
e4e8bd7b-7a10-4b5a-b8ee-1dbae488218e
குடியரசு தினத்தையொட்டி காஷ்மீரில் நடைபெறவுள்ள அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்கள் நேற்று ஸ்ரீநகர் கிரிக்கெட் மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: குடி­ய­ரசு தின விழாக் கொண்­டாட்­டம் டெல்­லி­யில் தொடங்கி உள்­ளது. இதை­யொட்டி,டெல்­லி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய பிர­த­மர் மோடி, இந்­தி­யா­வின் மறைக்­கப்­பட்ட அடை­யா­ளங்­களைப் புதுப்­பிப்­போம் என்று குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக, இந்­தியா கேட் பகு­தி­யில் நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போ­சின் சிலையை அவர் திறந்து வைத்­தார். டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்­கி­லே­யர்­க­ளின் ஆதிக்­கத்­துக்கு நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ் அடி­ப­ணி­ய­வில்லை என்­றும் அவர்­களை எதிர்த்து வீர தீரத்­து­டன் போரிட்­டார் என்­றும் பிர­த­மர் புகழ்ந்­து­ரைத்­தார்.

"இப்­போது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகி றோம். இது வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தரு­ணம். நேதா­ஜி­யி­டம் இருந்து பெற்ற உத்­வே­கத்­து­டன் நாட்டை முன்­னேற்­றும் பணி­யில் தொடர்ந்து ஈடு­ப­டு­வோம். இந்­தி­யா­வின் மறைக்­கப்­பட்ட அடை­யா­ளங்­களைப் புதுப்­பிப்­போம்," என்­றார் பிர­த­மர் மோடி.

எதிர்­வ­ரும் 2047ஆம் ஆண்­டில் நாடு நூறா­வது சுதந்­திர தின விழா­வைக் கொண்­டா­டும் வேளை­யில், புதிய இந்­தி­யாவை உரு­வாக்க வேண்­டும் என இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட பிர­தமர் மோடி, அதை எட்­டிப்­பி­டிக்க அனைத்துத் தரப்பினரும் கடி­ன­மாக உழைக்க வேண்­டும் என்­று வலியுறுத்தினார்.

இதற்­கி­டையே நேரம், இடப்­பற்­றாக்­குறை கார­ண­மாக குடி­ய­ரசு தினத்­தை­யொட்டி டெல்­லி­யில் நாளை நடை­பெற உள்ள அணி­வ­குப்­பில் 12 அலங்­கார ஊர்­தி­களுக்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், 15 வய­துக்கு உட்­பட்ட சிறார்­கள், இரண்­டா­வது கொரோனா தடுப்­பூசி செலுத்­திக் கொள்­ளா­த­வர்­கள் குடி­ய­ரசு தின விழா­வில் பங்­கேற்க அனு­மதி இல்லை என்­றும் விழா­வுக்கு வரும் அனை­வ­ரும் கண்­டிப்­பாக முகக்­க­வ­சம் அணிந்து, உரிய வகையில் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பிடிக்க வேண்­டும் என­வும் டெல்லி காவல்­துறை அறி­வித்­துள்­ளது.