பஞ்சாப் தேர்தல் களத்தில் விவசாயச் சங்கங்கள்

பஞ்சாப் தேர்தல் களத்தில் விவசாயச் சங்கங்கள்

1 mins read
13fee488-48bb-47a4-a693-ff93d1d2d505
-

சண்­டி­கர்: வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டிய விவ­சாய சங்­கங்­கள் ஒருங்­கி­ணைந்து பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலை எதிர்­கொள்ள முடிவுசெய்­துள்­ளன.

இதற்­காக 22 விவ­சாய சங்­கங்­கள் அடங்­கிய சம்­யுக்தா சமாஜ் மோர்ச்சா என்ற அர­சி­யல் கட்சி தொடங்­கப்­பட்­டுள்­ளது.

80 வய­தான மூத்த விவ­சாயி பல்­பீர் சிங் ராஜே வால் என்­ப­வர் இக்­கட்­சிக்கு தலைமை ஏற்­றுள்­ளார்.

இந்­நி­லை­யில், பஞ்­சாப் மாநி­லத்­தின் நிலைமை மோச­மாக இருப்­ப­தா­க­வும் அதை மாற்றி முன்­னேற்­றப் பாதை­யில் அழைத்­துச் செல்­லும் நோக்­கத்­து­ட­னேயே தேர்­தல் களம் காண்­ப­தா­க­வும் பல்­பீர் சிங் தெரி­வித்­துள்­ளார்.

"பஞ்­சாப் மாநில இளை­ஞர்­கள் நம்­பிக்கை இழந்­துள்­ள­னர். வேலை­ இல்­லாத் திண்­டாட்­டம் அதி­க­மாகிவிட்­ட­தால் அவர்­கள் வேறு மாநி­லங்­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர். வேலை வாய்ப்­பு­கள் இல்­லை­யென்­றால் குற்­றங்­கள் அதி­க­ரிக்­கும்," என்­றார் பல்­பீர் சிங்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் உள்ள 117 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளி­லும் தங்­கள் கட்சி போட்­டி­யி­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பாரம்­ப­ரிய கட்­சி­கள் மீது நம்­பிக்கை இழந்த மக்­கள், தேர்­த­லில் போட்­டி­யி­டு­மாறு தங்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­ய­தாக கூறி­ உள்­ளார்.

"மக்­க­ளுக்­குச் சேவை செய்யும் நோக்­கத்­தில் இருந்­து­ அ­ர­சி­யல் வாதி­கள் வில­கி­யுள்­ள­னர். இதனால் சாமா­னிய மக்­கள் சிர­மப்­படுகின்­ற­னர். அர­சி­யல் கட்­சி­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட அசுத்­தத்தை நாங்­கள் அகற்ற வேண்­டும் என மக்­கள் விரும்­பி­ய­தால் தேர்­த­லில் போட்டியிட முடிவு எடுக்­கப்­பட்­டது," என்கி­றார் பல்­பீர் சிங். முன்னதாக, விவசாய சங்கங்கள் சில தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்திருந்தன.