புதுடெல்லி: இந்தியா இலங்கைக்குத் தானமாக வழங்கிய கச்சத்தீவில் நடைபெறும் வருடாந்திர அந்தோணியார் ஆலய விழா இவ்வாண்டு மார்ச்
11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஆனால் கொவிட்-19 தொற்று காரணமாக இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.அதிகபட்சமாக இலங்கை பக்தர்கள் 500 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்த 2021ஆம் ஆண்டில் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த கச்சத்தீவு விழா ரத்து செய்யப்பட்டது.

