தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை

1 mins read
1f8c2300-2032-4026-a9d4-0e813950ccb2
ஒட்டிப் பிறந்த சோஹனா, மோஹனா ஆகிய இரு வருக்கு இரண்டு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது. படம்: டுவிட்டர், பஞ்சாப் தேர்தல் அதிகாரி -

சண்­டி­கர்: இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் ஒட்­டிப் பிறந்த இரட்­டை­யர்­க­ளுக்குத் தனித்தனி­யாக வாக்­கா­ளர் அட்டை வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­வர், மற்­ற­வர் வாக்­க­ளிப்­ப­தைப் பார்க்­கா­மல் இருக்க சிறப்பு ஏற்­பா­டு­கள் செய்து தரப்­படும் என்று பஞ்­சாப் மாநி­லத்­தின் தலைமை தேர்­தல் அதி­காரி எஸ். கருணா ராஜு கூறி­யுள்­ளார்.

அமிர்­த­ச­ரஸ் நக­ரத்­தைச் சேர்ந்த இரட்­டை­யர்­க­ளான சோஹன் சிங், மோஹன் சிங் ஆகிய இரு­வ­ரும் சோஹனா, மோஹனா என்று அன்­பாக அழைக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த ஆண்டு அவர்­க­ளுக்கு 18 வயது பூர்த்­தி­யா­னது. அவர்­க­ளுக்கு இரு வெவ்­வேறு வாக்­கா­ளர் அட்­டை­களை வழங்க தேர்­தல் ஆணை­யம் முடிவு செய்­தது.

இந்த நிலை­யில் முதல் முறை­யாக வாக்கு அளிக்­க­வி­ருப்­ப­வர்­க­ளுக்கு வாக்­கா­ளர் அட்டை வழங்­கும் நிகழ்ச்சி நேற்று நடை­பெற்­றது.

அப்­போது ஒட்­டிப் பிறந்த சோஹனா, மோஹனா ஆகி­யோ­ருக்­கும் இரு வெவ்­வேறு வாக்­கா­ளர் அட்டை வழங்­கப்­பட்­டது.

இந்த விழா­வில் 'உங்­கள் வேட்­பா­ளர்­களை அறிந்து கொள்­ளுங்­கள்' எனும் கைபேசி செய­லி­யை­யும் தேர்­தல் அதி­காரி திரு ராஜு அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.