தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்குச்சந்தைகள் தொடர்ந்து கடும் சரிவு

2 mins read
ee9e9152-b80b-4a17-9568-d90147efdee0
-

மும்பை: இந்­தி­யப் பங்­குச்­சந்­தை­கள் அண்­மை­யில் தொடர்ந்து கடும் சரி­வைச் சந்­தித்து வரு­கின்­றன.

உல­கம் முழு­வ­தும் கொரோனா தாக்­கத்­தால் பொரு­ளா­தா­ரம் பற்­றிய கவலை நில­வும் வேளை­யில், பல்­வேறு நாடு­களும் தொழில்­துறைக்கு ஊக்­கம் தரும் அறி­விப்­பு­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

அதன் எதி­ரொ­லி­யாக இந்­தி­யப் பங்­குச் சந்­தை­களும் கடந்த பத்து மாதங்­க­ளாக கடும் ஏற்­றத்­தில் இருந்­தன.

மும்பை பங்­குச்­சந்­தை­யில் சென்செக்ஸ் ஒரு கட்­டத்­தில் 60 ஆயிரம் புள்­ளி­க­ளைக் கடந்து புதிய சாதனை படைத்­தது.

இந்­நி­லை­யில், தென்ஆப்­பி­ரிக்­கா­வில் உரு­மா­றிய கொரோனா கிருமி கண்­ட­றி­யப்­பட்­டது. இத­னால் உலகெங்கும் முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் கலக்­க­மான சூழல் நில­வு­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யப் பங்­குச்­சந்­தை­கள் கடந்த வார­மும் இந்த வார­மும் பெரும் சரி­வைச் சந்­தித்­தன.

இத­னால் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சுமார் 10 லட்­சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. அந்த சரிவு நேற்­றும் நீடித்­தது.

நேற்று காலை 9:26 மணி நில­வ­ரப்­படி சென்­செக்ஸ் 1,011 புள்­ளி­கள் சரிந்து 56,847 ஆக இருந்­தது. என்­எஸ்இ நிஃப்டி 180 புள்­ளி­கள் சரிந்து 16,998 ஆக இருந்­தது.

உல­க­ளா­விய அள­வில் பங்­குச் சந்­தை­கள் சரிந்­த­தால், இந்­திய பங்­குச் சந்­தை­கள் நேற்று கடு­மை­யாக சரிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆசி­யப் பங்­குச்­சந்­தை­களில் பங்­கு­கள் 14 மாதங்­களில் இல்­லாத அளவு சரிவை எதிர்­கொண்­டன.

அமெ­ரிக்க மத்திய வங்­கி­யின் வட்டி விகி­தம் தொடர்­பான கணிப்­பால் டாலர் மதிப்பு உயர்ந்­தது. இதன் எதி­ரொ­லி­யால் உலகளவில் பங்­குச்­சந்­தை­கள் சரி­வ­டைந்­தன.

மேலும், ரஷ்­யா­விற்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான அர­சி­யல் பதற்­றங்­கள் குறித்த கவ­லை­யா­லும் முத­லீட்­டா­ளர்­கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் பங்­கு­களை விற்­பனை செய்­வ­தாகத் தெரி­கிறது.