மும்பை: அமெரிக்க-கனடிய எல்லையருகே சென்ற வாரம் இந்தியர்கள் நால்வரின் சடலங்கள் உறைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியக் காவல்துறை ஆறு பேரைத் தடுத்துவைத்துள்ளது. சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
மாண்ட நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை அவ்வாறு அனுப்பிவைத்த ஆள்கடத்தல்காரர்களைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் கூறினர். கைதான ஆறு பேரும் சுற்றுப்பயண ஏற்பாட்டு நிறுவனத்தை நடத்தியதாகத் தெரிகிறது. நால்வர் மாண்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்கர் ஒருவர் மீது அந்நாட்டு அதிகாரிகள் ஆள்கடத்தல் குற்றம்சாட்டியுள்ளனர்.

