பீகார் வன்முறை தொடர்பில் வழக்குப் பதிவு

பீகார் வன்முறை தொடர்பில் வழக்குப் பதிவு

1 mins read
3f9a3480-d207-4d49-93fa-d860cf0bf4af
-

பாட்னா: பீகார் ரயில்வே பணி­யா­ளர் தேர்வு எதிர்ப்பு வன்­முறைப் போராட்­டம் தொடர்­பாக யூடி­யூப் சேனல் நடத்தி வரும் 'கான் சார்' என்­ப­வர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. மாண­வர்­களை வன்­மு­றைக்­குத் தூண்­டி­ய­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள கான் சார், பீகா­ரில் பிர­ப­ல­மானவர்.

அவர் மீதான வழக்­குப் பதிவு, போட்­டித் தேர்­வுக்­குத் தயா­ரா­கும் மாண­வர்­கள் மத்­தி­யில் சல­சலப்பை உண்­டாக்­கி­யுள்­ளது. அர­சி­யல்­வா­தி­களும் அவர் மீதான வழக்­குப் பதிவை எதிர்த்­துள்­ள­தால் பீகார் மாநி­லத்­தில் இது முக்­கிய விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ளது.

போட்­டித் தேர்­வு­க­ளுக்­கான பயிற்சி வகுப்­பு­களை நடத்­தும் கான் மீது போராட்­டத்­தின்­போது வன்­மு­றை­யைத் தூண்­டி­ய­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டது. போராட்டம் நடத்த மாண­வர்­களை அவர் தூண்­டி­ய­தா­கக் கூறப்­படும் காணொளி, சமூக ஊட­கங்­களில் பர­வி­ய­தை­ய­டுத்து வழக்கு பதி­யப்­பட்­டுள்­ளது.

அது­கு­றித்­துப் பேசிய கான், "வன்­மு­றை­யில் எனது பங்கு இருந்­தால், என்­னைக் கைது செய்­யுங்­கள். இந்­தப் போராட்­டம் வன்­மு­றை­யாக மாறி­ய­தற்கு ரயில்வே பணி­யா­ளர் வாரி­யமே பொறுப்பு. வாரி­யத்­தின் முடிவு பட்­ட­தாரி மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே பய­ன­ளிக்­கும்" என்று கூறி­யுள்­ளார்.

முன்னதாக, ரயில்வே தேர்வுமுறையை எதிர்த்துப் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்களை மறித்தும் ரயில்கள் மீது கற்களை வீசியும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

கயாவில் காலியாக நின்றுகொண்டிருந்த ரயில் ஒன்றுக்கு மாணவர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.