வட்டாரப் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு

வட்டாரப் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு

1 mins read
40a31b65-949b-4299-a2ff-e7d292dbc672
-

புது­டெல்லி: மத்­திய ஆசிய நாடு­க­ளான கஜ­கஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான், தஜி­கிஸ்­தான், துர்க்­மெ­னிஸ்­தான், கிர்­கிஸ்­தான் ஆகி­ய­வற்­று­டன் இந்­தி­யா­வும் இணைந்த இந்­தியா-மத்­திய ஆசிய நாடு­கள் ஒத்­து­ழைப்­புக்­கான உச்­ச­நிலை மாநாடு முதல் முறை­யாக வியா­ழக்­கி­ழமை நடந்­தது. மாநாட்­டில் மேற்­கண்ட ஐந்து நாடு­க­ளின் அதி­பர்­க­ளான காசம்-ஜோமார்ட் தொக­யேவ் (கஜ­கஸ்­தான்), ஷவ்­கத் மிர்­சி­யோ­யேவ் (உஸ்­பெ­கிஸ்­தான்), எமோ­மலி ரஹ்­மான் (தஜி­கிஸ்­தான்), கர்­பங்­குலி பெர்­டி­மு­க­ம­தோவ் (துர்க்­மெ­னிஸ்­தான்), சதிர் ஜப­ரோவ் (கிர்­கிஸ்­தான்) ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

மெய்­நி­கர் வாயி­லாக நடை­பெற்ற இந்த உச்­ச­நிலை மாநாட்­டைப் பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்கி வைத்­தார்.

மாநாட்­டில் தொடக்க உரை­யாற்­றிய பிர­த­மர் மோடி, இந்­தக் கூட்­டமைப்பு வட்­டா­ரப் பாது­காப்­புக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது என்று கூறி­னார்.

"ஒருங்­கி­ணைந்த, நிலை­யான, விரி­வாக்­கப்­பட்ட அண்டை நாடு என்ற இந்­தி­யா­வின் பார்­வைக்கு மத்­திய ஆசியா மைய­மாக உள்­ளது. நாம் அனை­வ­ரும் ஆப்­கா­னிஸ்­தான் நிலைமை குறித்து அக்­கறை கொண்­டுள்­ளோம்.

"இது இந்­தி­யா­வுக்­கும், மத்­திய ஆசி­யா­வுக்­கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பை, வட்­டார நிலைத்­தன்­மைக்­கும் பாது­காப்­புக்­கும் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தாக்­கு­கிறது. அந்த வகை­யில், வட்­டா­ரப் பாது­காப்பு மற்­றும் செழு­மைக்கு இந்­தியா - மத்­திய ஆசியா இடையிலான ஒத்­து­ழைப்பு அவ­சி­யம்," என்று பிர­த­மர் மோடி கூறி­னார்.