தேசிய மாணவர் படை வலுப்படுத்தப்படும்: பிரதமர் மோடி

தேசிய மாணவர் படை வலுப்படுத்தப்படும்: பிரதமர் மோடி

1 mins read
1d20e112-dad2-4053-aec3-fc7a6f3eb3f0
புதுடெல்லியில் நேற்று நடந்த தேசிய மாணவர் படை அணிவகுப்பைப் பார்வையிடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடம்), உடனிருப்பவர் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (வலம்). படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: ஒவ்­வோர் ஆண்­டும் குடி­ய­ர­சு தின விழா­வின் உச்சக்கட்­ட­மாக ஜன­வரி 28ம் தேதி தேசிய மாண­வர் படை­யி­ன­ரின் சாகச நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

இந்த ஆண்­டு இந்நிகழ்ச்சி டெல்­லி­யில் உள்ள கரி­யப்பா திடலில் நடை­பெற்­றது.

இதில் பங்­கேற்ற படைப் பிரி­வி­னர் பல்­வேறு சாக­சங்­களில் ஈடு­பட்­ட­னர். ஹெலி­காப்­டர்­ மற்­றும் பீரங்­கி­ அணி­வ­குப்பு, வான்குடை சாக­சங்­கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்­றன. பிர­த­மர் நரேந்திர மோடி அவற்றைப் பார்­வை­யிட்­டு, அணி­வ­குப்பு மரி­யா­தை­யை­யும் ஏற்­றுக்கொண்­டார். பின்னர், சிறப்­பாகச் செயல்­பட்ட மாணவர்களுக்குப் பதக்­கங்­கள் வழங்கிப் பாராட்டினார்.