புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது பற்றி இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தமது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் பணி உரிய காலத்துக்குள் வெற்றிகரமாக முடிவடைந்தது.
இந்த நிகழ்வு, மத்திய அரசின் திறனையும், எதிர்காலத்தில் பங்கு விலக்கலை திறம்பட நிறைவேற்றுவதன் உறுதிப்பாட்டையும் உணர்த்துகிறது என்றார் அவர்.
புதிய உரிமையாளர்களுக்கு வாழ்த்து கூறியதுடன், அவர்களது நிர்வாகத்தில் ஏர் இந்தியா செழித்து வளரும் என்றும், இந்தியாவில் செழிப்பான, வலுவான சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பாதை அமைக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், "ஒட்டுமொத்த நாட்டின் கண்களும் நம் மீது உள்ளன.
"நாம் என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை காண காத்திருக்கின்றன'' என்று கூறியுள்ளார்.

