ஏர் இந்தியா இனி செழிக்கும்: அமைச்சர் சிந்தியா

ஏர் இந்தியா இனி செழிக்கும்: அமைச்சர் சிந்தியா

1 mins read
7b19e5b8-54b2-48bc-a1e5-8b64eaef43aa
-

புது­டெல்லி: ஏர் இந்­தியா நிறு­வ­னம், டாடா குழு­மத்­தி­டம் முறைப்­படி ஒப்­ப­டைக்­கப்­பட்­டது பற்றி இந்­தி­யா­வின் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா தமது 'டுவிட்­டர்' பக்­கத்­தில் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

ஏர் இந்­தி­யா­வின் பங்­கு­களை விலக்­கிக் கொள்­ளும் பணி உரிய காலத்­துக்­குள் வெற்­றி­க­ர­மாக முடி­வ­டைந்­தது.

இந்த நிகழ்வு, மத்­திய அர­சின் திற­னை­யும், எதிர்­கா­லத்­தில் பங்கு விலக்­கலை திறம்­பட நிறை­வேற்­று­வ­தன் உறு­திப்­பாட்­டை­யும் உணர்த்­து­கிறது என்­றார் அவர்.

புதிய உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வாழ்த்து கூறி­ய­து­டன், அவர்­க­ளது நிர்­வா­கத்­தில் ஏர் இந்­தியா செழித்து வள­ரும் என்­றும், இந்­தி­யா­வில் செழிப்­பான, வலு­வான சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்­குப் பாதை அமைக்­கும் என்­றும் அமைச்­சர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

டாடா சன்ஸ் குழு­மத் தலை­வர் ஊழி­யர்­க­ளுக்கு எழு­திய கடிதத்­தில், "ஒட்­டு­மொத்த நாட்­டின் கண்­களும் நம் மீது உள்­ளன.

"நாம் என்ன சாதிக்­கப்­போ­கி­றோம் என்­பதை காண காத்­தி­ருக்­கின்றன'' என்று கூறி­யுள்ளார்.